இந்த நடிகருடன் ஆட மாட்டேன்… அழுது ஆர்பாட்டம் செய்த பூனம் பாஜ்வா..! – தீயாய் பரவும் தகவல்..!

மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியான அவர் நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தன்னுடைய திறமையை காட்ட மும்பையில் இருந்து விமானம் ஏறி வந்தவர் அம்மணி.

தன்னால் எந்த அளவுக்கு தன்னுடைய திறமையை காட்ட முடியுமோ..? அந்த அளவுக்கு காட்டு காட்டு என காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை கிடுகிடுக்க வைத்தார். தற்பொழுதும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார்.

உரிச்சு வச்ச ஆப்பிள் போல இருக்கும் கலர்… அழகான முகம்.. தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த புசுபுசுவென இருக்கும் உடற்கட்டு.. வாட்டசாட்டமான தோற்றம் என கிளாமர் புதையலாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தமிழில் தெனாவெட்டு கச்சேரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக தன்னை நிலை நிறுத்தினார்.

கடைசியாக குப்பத்து ராஜா, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். தற்போது நடிகர் சதுரங்க வேட்டை நட்டி @ நடராஜன் ஹீரோவாக நடித்து வரும் குருமூர்த்தி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

இந்நிலையில், இவரை பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2013-ம் ஆண்டு திரைத்துறையினர் சார்பில் சினிமா 100வது ஆண்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் நடிகை பூனம் பாஜ்வா நடனம் ஆடுவதாக இருந்திருக்கின்றது. இந்த பாடல் ஒத்திகையின் போது நடிகை பூனம் பாஜ்வா நடிகர் பிருத்விராஜுடன் சேர்ந்து நடனம் ஆடுவதாக திட்டம்.

அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்த இயக்குனர் செல்வமணி அவர்களிடம் நடிகை பூனம் பாஜ்வா என்னோடு ஜோடியாக நடனம் ஆடுவது யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் பிரித்திவிராஜ் என்று கூறியிருக்கிறார். இதனால் மகிழ்ச்சியாகியுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

பிறகு, அவர் எப்போது வருவார் என்று கேட்டிருக்கிறார். உடனே இயக்குனர் செல்வமணி அவர் இங்கேதான் இருக்கிறார். இதோ வந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். பார்த்தால் வந்தது பப்லு பிரித்திவிராஜ்.

பப்லூ பிரித்திவிராஜை பார்த்த பூனம் பாஜ்வா நான் மலையாள நடிகர் பிரித்திவிராஜ் என்று நினைத்தேன். இவருடன் என்னால் நடனம் ஆட முடியாது என்று கூறி இருக்கிறார். ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தன்னுடைய பணியை செய்ய வேண்டும் என்பதால் நீங்கள் இருவரும்தான் ஆடவேண்டும் என்று கூறியிருக்கிறார் ஆர்கே செல்வமணி.

உடனே அந்த இடத்திலேயே அழுது ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறார் நடிகை பூனம் பஜ்வா. இவருடன் நடனமாட முடியாது என்று அழுதிருக்கிறார். அதன் பிறகு வேறு வழியில்லாமல்.. நடிகை ராதிகாவிடம் ஆலோசனை பெற்று.. சரி.. நீங்கள் மட்டும் தனியாக ஆடிக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்கள். அதன்பிறகு நடிகை பூனம் பாஜ்வா சோலோவாக நடனமாடி இருக்கிறார் என்ற தகவல் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …