என்னது..? இவர் தான் நடிகர் சிவகுமார்-ன் மகளா..? – ரசிகர்கள் ஷாக்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சிவகுமார் 70 மற்றும் 80 களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். முருகன் என்றாலே நடிகர் சிவக்குமார் தான் அன்றைய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முகமாக இருந்தார்.

இவர் முருகப்பெருமானின் வேடமேற்று நடித்ததற்கு பிறகு இவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்றங்கள் தான். அவருடைய இரண்டு மகன்களை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் தங்களால் எந்த அளவுக்கு பங்களிப்பு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை கொடுத்து தங்களுடைய தந்தைக்கும், தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.

மட்டுமில்லாமல் பொது வாழ்க்கையிலும் கூட தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சூர்யா தேசிய விருதையும் பெற்றார். மட்டுமில்லாமல் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவிற்கு சிறந்த தயாரிப்பாளர் என்ற தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த பாலிவுட் நடிகை ஆலியா பட்டிருக்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்தவர் யார் தெரியுமா..? ஆம் நடிகர் சிவகுமாரின் மகளும்,நடிகர் சூர்யாவின் தங்கையும், நடிகர் கார்த்தியின் அக்காவுமான பிருந்தா சிவகுமார் தான்.

சமீப காலமாக சினிமா துறையில் மும்முரமாக இயங்கி வரும் பிருந்தா சிவகுமார் சினிமாவுக்கு ஒன்றும் புதிது கிடையாது. முன்னதாக பிரபல பின்னணி பாடகியாக பலராலும் அறியப்பட்டவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரியான இவர் ஜாக்பாட், பொன் மகள் வந்தாள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் தன்னுடைய பங்களிப்பை சினிமாவிற்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில்,  பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் நடித்து இருந்த நடிகை ஆலியா பட்டிருக்கு தமிழ் டப்பிங் கொடுத்தவர் பிருந்தா சிவகுமார் தான்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த 1980-ஆம் ஆண்டு பிறந்த பிருந்தா சிவக்குமார் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பிரபல இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இவரை பாடுவதற்கு அழைத்திருக்கிறார்.

ஆனால் பொதுத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை நிராகரித்து இருக்கிறார் பிருந்தா சிவக்குமார். படிப்பில் முழு கவனம் செலுத்திய இவர் சமீபத்தில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார்.

இந்த பாடல் பாடிய பிறகு இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஓ2 என்ற படத்தில் சுவாசமே என்ற பாடலை பாடியிருக்கிறார் இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார் விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சிவகுமாரின் மகள் ஒரு பின்னணிப் பாடகி என்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து தான் போயிருக்கிறார்கள்.

இன்னும் சிலர்.. சிவகுமாருக்கு மகள் இருப்பதே தெரியாது என்று கூட கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …