விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றைப்படம்…. சினேகா பிரசன்னா …!!

தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படக்கூடிய சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் இவர்களது இல்லற வாழ்க்கை மிகவும் அழகான முறையில் நகர்ந்து வந்திருக்கக்கூடிய வேலையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாக அவர்கள் திகழ்கிறார்கள்.

 திரை உலகில் சிறந்த தம்பதிகளாக திகழக்கூடிய இவர்கள் திடீரென்று விவாகரத்து செய்யப் போவதாகவும் மேலும் தற்போது சினேகா பிரசன்னாவை விட்டு தனியாக வசித்து வருவதாகவும் சில வதந்திகள் சில நாட்களுக்கு முன் வேகமாக பரவி வந்தது.

இதை அடுத்து கவலை அடைந்த ரசிகர்கள் அடடா என்ன கண் பட்டது என்று தெரியவில்லையே. இவர்கள் இருவருக்கும் இப்படியா ஒரு நிலைமை என்று புலம்பித் தவித்தார்கள்.

இந்த புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய விதத்தில் தற்போது சினேகா வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு புகைப்படத்தை பார்த்து ஆழ்ந்த பெருமூச்சினை ரசிகர்கள் வீற்றிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இரண்டு நாட்களாக பரவி வந்தது வெறும் வதந்தி தான் என்பது இப்போது ரசிகர்களுக்கு புரிந்து விட்டது. எப்போதும் போலவே இந்த ஜோடிகள் இணைந்து வாழத்தான் போகிறார்கள். அதை யாரும் தடுக்க முடியாது என்பது போல இருக்கக்கூடிய ஒற்றை புகைப்படம் தற்போது இவரது விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 இந்தப் புகைப்படத்தில் சினேகா தனது கணவருக்கு முத்தம் கொடுப்பது போல் நெருங்கி இருக்கக்கூடிய காட்சியைத் தான் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

  இதனைப் பார்த்து வரும் திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்றும் இவர்கள் இன்று போல் நன்றாக இணைந்து வாழ வேண்டும் அதற்காக இறைவனை பிரார்த்தனை செய்யப் போவதாகவும் கூறி இருக்கிறார்கள்.

தொழில் ரீதியில் இருவருமே பக்காவாக செயல்பட்டு வரக்கூடிய வேளையில் சினேகா சின்ன திரையை தற்போது ஆக்கிரமித்து இருக்கிறார். பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் இவருக்கு கிடைத்த பெயர் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்கவில்லை என்று கூறலாம்.

 எப்போதும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கும் பல்லழகி சினேகாவிற்கு அனைவரும் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …