பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து பாய தயாராகி விட்ட பாரதிராஜா… கனவு ஜெயிக்குமா?

இந்திய திரை உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட ஒரு படம் என்றால் அது பொன்னியின் செல்வன் படத்தை கூறலாம். பேன் இந்திய திரைப்படமாக வெளி வந்த இந்த படம் வசூலை வாரி குவித்ததோடு இதை இயக்கிய மணிரத்தினத்திற்கு மாபெரும் பெயர் கிடைத்தது.

 ஏற்கனவே ஜாம்பவான் இயக்குனர்களின் வரிசையில் இவர் பெயர் இடம் பெற்று இருந்ததை  அடுத்து காலச்சக்கரம் எவ்வளவு சுழன்றாலும் என் பெயர் என்றும் திரையுலகில் நிலைத்து நிற்கும் என்பதற்கு சான்றாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.

அந்த வரிசையில் தன்னுடைய பெயரும் வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல எதார்த்த படங்களை கொடுத்த இயக்குனர் பாரதிராஜாவும் வாழ்நாள் சாதனையாக ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என்று தற்போது துடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு பக்க பலமாக இளம் இயக்குனர்களாக திகழும் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படத்தைப் போலவே பாரதிராஜாவும் ஒரு படத்தை தற்போது இயக்க உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான இசையை இளையராஜா இசையமைக்கலாம் என்று காத்திருந்த வேளையில் அவரது மகளான பவதாரணி இந்த படத்திற்கான இசையை அமைப்பதில் களம் இறங்கி இருக்கிறார்.

இதனை அடுத்து பாரதிராஜா  இயக்குனராக மீண்டும் அவதாரம் எடுக்கும் இந்த படம் சிறப்பாக வரவேண்டும் என்று அனைவரும் இப்போதே வேண்டிக்கொள்கிறார்கள்.

மேலும் வயது மூப்பு காரணமாக தோய்ந்து இருந்த இவர் தற்போது பொன்னியின் செல்வன் பாட்டு வெகுண்டு எழுந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் இந்த வயதிலும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இவரை போல் இருக்கக்கூடியவர்களைப் பார்த்து இளைய தலைமுறை தங்களுடைய கனவை விரிவாக்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …