இரண்டு ஆண்டுகள் காத்திருந்த இயக்குனருக்கு பை… பை… சொன்னாரா ? – கமலஹாசன்…!!

சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னால் கமலஹாசனின் மார்க்கெட் பல மடங்கு உச்சத்திற்கு சென்றது. அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகிறது.

 இந்தப் படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது .மேலும் இந்த படமானது பாக்ஸ் ஆபிஸில் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் காட்டியது விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு கமலஹாசனின் நிலை தற்போது ஓஹோ என்று உயர்ந்து விட்டது.

 இப்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கம் இந்தியன் இரண்டு படத்தில் நடித்து வருகிறார். இதனை அடித்து துணிவு பட இயக்குனர் எச் வினோத்துடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

 அதுமட்டுமல்லாமல் மணிரத்தினம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை உதயநிதியை ஸ்டாலின் தயாரிக்கிறார் என்ற பரபரப்பு அடங்குவதற்குள் ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளிவந்திருக்கிறது.

கமல், பகத் பாசில், மகேஷ் நாராயணன் தவிர பா ரஞ்சித் வெற்றிமாறன் ஆகியோர் கமலுக்கு கதை சொல்லி ஓகே வாங்கி இருந்த நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கமல் செம பிஸியாக இருப்பதால் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்க இருந்த படம் கைவிட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 விக்ரம் படத்திற்கு முன்னரே எந்த கூட்டணி அணி திரண்ட இருந்த நிலையில் இது தேவர் மகனின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று யுகித்த நிலையில், மகேஷ்  நாராயணன் இந்த படத்திற்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தற்போது அந்த படம் கைவிடப்பட்டதால் அவர் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறார்.

மேலும் இது அதிகாரப்பூர்வமான தகவலா? இல்லையா? என்பது இதுவரை தெரியாத நிலையில் தற்போது இணையத்தை உலுக்கி இருக்கும் இந்த செய்தி தான் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …