எதற்காக ரஜினிகாந்த் திருப்பதி சென்றார் அதுவும் மகள் ஐஸ்வர்யாவுடன்… விவரம் உள்ளே…!!

 தமிழ் திரை உலகில் அன்று மட்டும் இல்லாமல் எப்போதுமே சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும்  ரஜினிகாந்த் ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய  அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கிறார்கள்.

 இவர் தனது ஸ்டைலின் மூலம் இன்று இருக்கக்கூடிய  இளைய தலைமுறைகளின் மனதிலும் ஆழப் பதிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

 இந்த சூழ்நிலையில் இவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார்.

 மேலும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடினார். மேலும் அவர் அன்று இரவு திருப்பதி சென்றார்.

 இவருடன் இவர் மகள் ஐஸ்வர்யாவும் சென்றிருந்த வேளையில் டி எஸ் ஆர் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த இவர்கள் அதிகாலையில் சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

 அதன் பிறகு தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் 6 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதில் ஏழுமலையானை தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி என கூறி இருக்கிறார்.

 மேலும் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கக்கூடிய நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து திருப்பதிக்கு சென்று வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஜெயிலர் படம் மற்றும் லால் சலாம் படம் மாபெரும் வெற்றி தருவதோடு வசூலில் சாதனை புரிய  வேண்டும் என்ற கோரிக்கையை ஏழுமலையான் இடம் வைக்க சென்றார்களா என்று ரசிகர்கள் கேள்விகள் மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …