பிரபல நடிகை லட்சுமி மேனன் புதிதாக ஒப்பந்தமாகியிருக்கும் கூடிய தெலுங்கு படமொன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வைத்துக்கொண்டு நீச்சல் உடையா என்று பதறி வருகின்றனர்.
தமிழில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் தொடர்ந்து கும்கி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் சுந்தரபாண்டியன் என்றாலும் கூட முதலில் ரிலீசான திரைப்படம் கும்கி ஆகும். எனவே இவருடைய அறிமுக திரைப்படம் கும்கி என்பதுதான் சரியாக இருக்கும் கும்கி திரைப்படம் படமாக்கப்படும் போது லட்சுமிமேனன் பத்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார்.
பள்ளி முடித்த பிறகு மாலை நேரங்களில் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். பள்ளி முடிந்த பிறகு நான் மிகவும் சோர்வாக உணர்வேன். அதே சோர்வுடன் தான் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வேன்.
ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாலே அந்த சோர்வு எல்லாம் எனக்கு மறந்து விடும். இயக்குனர் சொல்வதை அப்படியே நடித்துக் கொடுத்துவிட்டு வீடு திரும்புவேன் என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார் நடிகை லட்சுமிமேனன்.
தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எல்லாமே ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிக்க அடுத்தடுத்த படங்கள் ஹிட்டடித்தன. இதனால் ராசியான நடிகை என்ற பெயருக்கு சொந்தக்காரி ஆக மாறினார் நடிகை லட்சுமிமேனன்.
ஒரு கட்டத்தில் இவருடைய படங்கள் தோல்வியை தழுவ ஆரம்பித்தன. இதனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில், நான் படிப்பை கவனிக்கிறேன் என்று தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற அவர் இன்னும் திரும்பவில்லை.
மேலும், தமிழ் சினிமாவில் இவருக்கு ஒருவர் காதல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த நடிகரால் தான் நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்துவிட்டார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை லட்சுமிமேனன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
முன்னணி கதாநாயகன் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த படத்தில் நடிகை லட்சுமிமேனன் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை, பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து நின்றனர்.