நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சசிகுமாரின் வெற்றிவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகை பிரவீனா தற்பொழுது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் நடித்து வந்த இவருக்கு தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் அரசியலுக்கு வரப் போவதாகவும் பிரபல தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் முக்கியமான பொறுப்பில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இது உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார் நடிகை பிரவீனா.
மேலும் சட்டசபை தேர்தலில் கொள்ளும் அல்லது திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் சீட் கேட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அந்த தகவலையும் மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார் நடிகை பிரவீனா.
இது குறித்து அவரிடம் கேட்டபோது நான் அரசியலுக்கு வருவது உண்மை கிடையாது. அப்படி இருக்கும் பொழுது சட்டமன்ற உறுப்பினராக சீர்கேடு என்பது எப்படி பொருத்தமாக இருக்கும் இப்படியான தகவல்கள் நிஜமாகவே என்னை வருந்தத்தக்க செய்கின்றன என்று பதிவு செய்திருந்தார்.
மேலும் என்னுடைய கவனம் முழுதும் நடிப்பு சினிமா மற்றும் சீரியல்களில் மட்டும்தான் இருக்கிறது. அதனால், மட்டுமே நான் என்னுடைய முதல் கதை முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.
அரசியலுக்கும் எனக்கும் நீண்ட தூரம் என்று கூறியிருக்கிறார் பிரவீனா. இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய அழகான புகைப்படங்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க இப்போவும் ஹீரோயினாக நடிக்கலாம் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு இளமையாக தோற்றம் அளிக்கிறீர்கள் என்றும் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.