பத்திரிக்கையாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தன்னை ஒரு தீவிர பெண்ணியவாதி ஆகவும் தீவிர பெரியாரை பின்தொடரும் பெண்ணாகவும் கட்டிக் கொள்கிறார்.
பத்திரிகையாளர் மற்றும் செய்தியாளராக மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் பனிமலர் பண்ணீர்செல்வம்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தன்னை படுக்கைக்கு அழைத்த ஒரு நபர் குறித்து சமூக வலைதள பக்கங்களில் வெளிப்படையாக பதிவு செய்து பெரும் பரபரப்பை கிளப்பினார் பத்திரிக்கையாளர் பனிமலர்.
கடை திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு கேட்டு அதன்பிறகு ஒரு நைட்டுக்கு நான் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறேன் ஒருநாள் தங்க முடியுமா என்று ஆசாமி ஒருவர் இவருக்கு அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை பொதுவெளியில் வெளியிட்டு அதிர வைத்தார் பனிமலர்.
இதுகுறித்து அவர் கூறியபோது தொழில்முனைவோருக்கு விளம்பரம் செய்துகொடுக்க முயற்சிக்கிறோம். ஆனால், இப்படி அனாவசியமாக பேசிய தொந்தரவு செய்யும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெண்கள் வேலை செய்தால் வேலை செய்யவில்லை என்று சொல்கிறோம் செய்யும் பொழுது இப்படி தொந்தரவு செய்தால் அவர்களும் என்னதான் செய்வார்கள் இதுபோல் ஆசாமிகள் நிறையவே இருக்கிறார்கள்.
ஆண்கள் இதுமாதிரி செய்யும்போது நம் வீட்டுப் பெண்களிடமும் யாராவது ஒருவர் எப்படி நடந்து கொள்வார்கள் என்று யோசனை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கவர்ச்சி உடையில் இவர் வெறுக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினிமா ஹீரோயின்களே தோத்துதுவங்க போல இருக்கு என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.