“இதனால் தான் பார்த்திபனை டைவர்ஸ் பண்ணேன்…” – இதுல என்ன தப்பு..? – போட்டு உடைத்த நடிகை சீதா..!

இதனால்தான் பார்த்திபனை விவாகரத்தை செய்தேன் என்று முதன் முறையாக வாயை திறந்து இருக்கிறார் நடிகை சீதா. 80களில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சீதா.

உயரம் குறைவாக இருந்தாலும் கூட லட்சணமான முகம்.. வாட்டசாட்டமான தோற்றம்.. என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஒரு கட்டத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்தும் செய்தார். அவருடைய காதலில் விழுந்த போது அவருக்காக மொட்டை போட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன என்று இயக்குனர் பாக்யராஜ் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய விவாகரத்துக்கான உண்மையான காரணம் பற்றியும்.. மேலும், எப்படி எனக்கு பார்த்திபன் மீது காதல் வந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

இதற்கு முன்பாக சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியதாவது, நடிகை சீதா அவருடைய காதலை என்னிடம் கூறும் பொழுது அதை நான் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இருந்தேன். அதனால் ஏற்றுக்கொண்டேன் என்று கூறினார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் பார்த்திபன் தான் நடிகை சீதாவை முதலில் விரும்பியிருக்கிறார். இதைப் பற்றிக் கூறிய சீதா, பார்த்திபன் என்னிடம் அடிக்கடி போன் செய்து அந்த மூன்று வார்த்தையை மட்டும் சொல் என்று கேட்பார்.

எனக்கும் அவர் மீது காதல் இருந்தது. ஒருமுறை நான், ஐ லவ் யூ என்று கூறினேன். அப்போது என்னுடைய அப்பா வேறு ஒரு போனில் இருந்து இதை கேட்டு விட்டார். இப்படித்தான் எங்கள் காதல் விவகாரம் எங்கள் வீட்டிற்கு தெரிய வந்தது. அதன் பிறகு தான் எங்களுடைய திருமணம் நடைபெற்றது.

மற்றபடி அவரிடம் நான் காதலை கூறினேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். மேலும் ஒரு ஆண் குழந்தையையும் தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர்.

இப்படியான சூழலில்தான் கடந்த 2001-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு நடிகை சீதா ஒரு சீரியல் நடிகை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

தற்போது தனிமையில் வசித்து வரும் இவர் தங்கள் விவாகரத்துக்கான காரணத்தை பற்றி முதன் முறையாக வாய் திறந்திருக்கிறார். முன்னதாக நடிகர் பார்த்திபன் கூறிய ஒரு பேட்டியில் நடிகை சீதா என்னிடம் அதிகமாக எதிர்பார்ப்பது தான் எங்களுடைய பிரிவுக்கு காரணமாக அமைந்தது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை சீதா நான் என் புருஷன் எனக்கு மட்டும் தான் என்று வாழ்பவள் நான். அதனால் அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பில் என்ன தவறு இருக்க முடியும்.

இப்படிப்பட்ட மன அழுத்தத்தால் தான் நாங்கள் பிரிந்து கொண்டோம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவர்களுடைய விவாகரத்து பற்றி பல செய்திகள் ஏற்கனவே வெளிவந்தன. இந்நிலையில், அவர்களே நேரடியாக தங்களுடைய கருத்து வேறுபாட்டை கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இவருடைய விவாகரத்திற்கு இதுதான் காரணம் என்று வட்டமடித்து வந்த பல்வேறு வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …