சரோஜா திரைப்படத்தில் கோடான கோடி அதில் குதிப்போம் விளையாடி என்ற ஒரு பாடலில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை நிகிதா.
இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இந்நிலையில் தமிழ் தெலுங்கு என நடித்துவிட்டு கன்னட சினிமாவில் நடிக்க சென்ற இவர் அங்கேயே கையையும் காலையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அங்கே ஏற்கனவே திருமணம் ஆன நடிகர் ஒருவருடன் ஊர் சுற்றி வந்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் நட்பாக தொடர்ந்து இவர்களுடைய இந்த உறவு நாட்கள் செல்லச் செல்ல கள்ளக்காதல் ரேஞ்சுக்கு சென்றது. படப்பிடிப்பு முடிந்ததும் தனியாக செல்வது தங்களுடைய காதலை கொண்டாடுவது என ஜெகஜோதியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இதனை அறிந்த அந்த நடிகரின் மனைவி நடிகை நிகிதாவை பல முறை கண்டித்து இருக்கிறார். ஆனால் எதற்கும் செவிசாய்க்காத நிகிதா அவருடைய கணவருடன் தொடர்ந்து ஊர் சுற்றி வந்து இருக்கிறார்.
இதனால் கடுப்பான அந்த நடிகரின் மனைவி கன்னட தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். இப்படி திரைப்படத்தில் நடிக்கும் நடிகை என்னுடைய வாழ்க்கையை பாழாக்கி வருகிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு பெட்டிஷன் கொடுத்திருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது இதனை தொடர்ந்து உஷாரான நடிகை நிகிதா ஆள விடுங்கடா சாமி என்று தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பறந்து விட்டார்.
அங்கே சென்று அவருடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.