நடிகை நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஸ் சிவனை கரம்பிடித்தார். திருமணம் முடித்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தையும் பெற்றெடுத்தார் நடிகை நயன்தாரா.
திருமணத்திற்கு பிறகு வெளியான அதனுடைய படங்கள் அனைத்துமே தோல்வியடைந்ததால் பெருத்த நஷ்டத்தில் இருக்கிறார் என்ற விவரம் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் இவருடைய தயாரிப்பில் வெளியான சில திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. எனவே மீண்டும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆயத்தமாய் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி ஓடுவார் நடிகை நயன்தாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஹீரோயினாக தன்னுடைய பயணத்தை தொடர இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது.
ஏற்கனவே வேலைக்காரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் போது சிவகார்த்திகேயனுக்கு அக்கா போல இருப்பதாகவும் இவரை எப்படி ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று பொதுவான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா முதல் கட்டமாக நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில பாடல்களுக்கும் அவருடன் சேர்ந்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகக்கூடிய திரில்லர் படமான இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார் இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது