நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்றைய தமிழ் சினிமாவின் திறமையான ஹீரோயின்களில் ஒருவராக ரசிகர்கள் பார்க்கப்படுகிறார். தன்னுடைய சிறந்த நடிப்பினாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதைத் தேர்விலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அன்றே அவர் ஜமுனா சூழல் தி கிரேட் இந்தியன் கிட்சென் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு சான்றாக அமைந்தது.
மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் சரி ஹீரோவுக்கு தங்கையாக நடிப்பதாக இருந்தாலும் சரி எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் பக்காவாக பொருந்தியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. தற்போது நிலையின் படி 2026 ஆம் வருடம் வரை அவருக்கு கால்ஷீட் இல்லை என்ற நிலைதான் இருக்கிறது.
இவர்தான் கோலிவுட்டின் அடுத்த நயன்தாரா என்று பலரும் கூறுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றது மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பது தான் இவருடைய மிகப்பெரிய பலம் என்று கூறலாம்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கண்டிப்பாக உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகள் இருக்கும் இதையெல்லாம் தெரிந்து படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறுகிறார்கள்.
ஏற்கனவே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படத்தில் திரைப்படத்தை எடுத்திருந்தார்கள். இந்த படத்தில் நடிகை வித்யாபாலன் சில்க் ஸ்மிதா நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.