பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒரு கட்டத்தில் சீரியல் நடிகையாக தன்னை உயர்த்திக் கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட இவர் அந்த தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்தார்.
அதனைத் தொடர்ந்து மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு அடுத்த வெற்றிப் படங்களாக குவிந்தன.
இவர் நடிப்பில் தற்போது உருவாகி வருகின்றன மேலும் தன்னுடைய காதலனை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலனுடன் புதிய வீட்டில் குடியேற இருக்கிறேன் என்று சமீபத்தில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர் இதன் மூலம் இவர் தன்னுடைய காதலனுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இருக்கிறார் என்று தெரியவந்தது.
இந்நிலையில் இவரை பற்றிய சுவாரசியமான ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது செய்தி வாசிக்கும் அரங்கத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது அங்கே இருந்த ஒரு சாமியார் அங்கங்கே தான் வைத்திருந்த தண்ணீரை தெளித்து விட்டு இருக்க அதை தண்ணீரை நடிகை பிரியா பவானி சங்கர் முகத்திலும் தெளித்திருக்கிறார்.
அப்போதுதான் மேக்கப் போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்த நடிகைகளின் மேக்கப் இதனால் கலைந்தது. இதனால் கடுப்பான நடிகை பிரியா பவானி சங்கர் கேமராமேனை பார்த்து என்ன கொடுமை இது.. என்ன பண்றாங்க.. என்று கேட்துள்ளார்.
உங்களை, தீயசக்திகள் அண்டாமல் இருப்பதற்காக இப்படி செய்கிறார்கள் என கேமராமேன் கிண்டலாக பதில் கூறியிருக்கிறார். முதல் நாள் செய்தி வாசிக்க போகிறேன்.. ஆனால் என்னை பார்த்து தீய சக்தி என்று சொல்லி விட்டார்களே.. என்று கோபப்பட்டாராம்.. இந்த சம்பவத்தை தனது பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.