நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள துணை முதல்வரிடம் சற்று முன்பு உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
மட்டுமில்லாமல் நடிகர்கள் சரத்குமார் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகும் முன்பே இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் மற்றும் குடும்ப பின்னணி கொண்ட திரைப்படம் என்று ரசிகர்களிடம் ஆழமாக பதிய வைத்தது படக் குழு.
அதற்கு ஏற்றார் போலவே முழுக்க முழுக்க ஒரு சென்டிமென்ட் படமாக மனதை உருக்கக்கூடிய காட்சிகளுடன் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை வாருங்கள் பார்ப்போம்.
பிரபல சினிமா விமர்சகர் ஸ்ரீதேவி ஸ்ரீதர் பதிவிட்டுள்ள பதிவில் வாரிசு திரைப்படத்திற்கு ஐந்துக்கு நான்கு மார்க்குகள் போடலாம். இந்த படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் தர்மயுத்தம் ஆகவும் தெரிகிறது. நடிகர் விஜய் ரசிகர்களே எதிர்பார்த்து இருக்காத ஒரு கதை. அந்த அளவுக்கு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வாரிசு பொங்கல் என்று பதிவிட்டு இருக்கிறார்.
திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்டுள்ள பதிவு வாரிசு திரைப்படம் பிளாக்பஸ்டர் என்று பதிவிட்டு இருக்கிறார்.
தொகுப்பாளனி VJ ரம்யா பதிவிட்டுள்ள பதிவில் வாரிசு திரைப்படம் தளபதி ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த பட குழுவுக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
பிரபல சீரியல் நடிகை நிஷா கணேஷ் பதிவிட்டுள்ள பதிவில்.. இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தோம்.. ஒவ்வொரு கட்சியும் ஸ்டைலாக இருக்கிறது விஜய் அண்ணா மாஸ்.. ராஸ்மிகா க்யூட்.. விஜய் ரசிகர்களுக்கும் குடும்ப ரசிகர்களுக்கும் பிடித்த அருமையான படம் என்று பதிவிட்டு இருக்கிறார்.
இன்னொரு ரசிகர் பதிவேற்ற பதிவு வாரிசு திரைப்படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதி மிகவும் நன்றாக இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.
இன்னொரு ரசிகர் பதிவிட்டுள்ள பதிவில் இந்த படத்தின் கதைக்கும் திரைக்கதைக்கும் ஒத்து போகவில்லை. முதல் பாதியிலேயே நான்கு பாடல்களும் என்பது தெலுங்கு சினிமாவுக்கு வேண்டும் என்றால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் இதனை விரும்ப மாட்டார்கள்.
படத்தில் வரக்கூடிய மனதை தொடும் வசனங்கள் எதுவுமே ரசிகர்களுடன் கனெக்ட் ஆகவில்லை. மூன்று மணி நேரம் ஏமாற்றம்.. என்று தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இன்னொரு ரசிகர் பதிவிட்டுள்ள பதிவில் நீண்ட நாளுக்கு பிறகு இப்படியான விஜய் திரையில் பார்க்கிறோம். மிகவும் வித்தியாசமான முயற்சி. இந்த மாதிரியான படங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்று நடிகர் விஜய் சாதித்து காட்டி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி மனதை உருக்குவதாக இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு என ஒரு குடும்ப ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்களுக்கான படம் தான் இது கடந்த சில வருடங்களாக வெளியாகாமல் இருந்தது தற்போது அவர்களுக்கான படம் ஆக இந்த வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக அம்மா மகன் சென்டிமென்ட் தான் பலராலும் பேசப்பட்டிருக்கும். இந்த படத்தில் அப்பா மகன் இடையில் இருக்கும் சென்டிமென்ட் மிகவும் எதார்த்தமாகவும் மனதை உருக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது என்று இன்னொரு ரசிகர்கள் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.