தமிழைப் பொறுத்தவரை பல டஜன் படங்களை தன் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கர் பிஸியான நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடிய நபராவார்.
தற்போது தமிழில் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்திலும், எஸ் ஜே சூர்யாவின் பொம்மை படத்திலும், ஷங்கர் இயக்கக்கூடிய இந்தியன் 2 படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன் படத்திலும், ராகவா லாரசுடன் இணைந்து ருத்ரன் படத்திலும், அஜயீ ஞானமுத்து இயக்கம் டிமேண்ட் காலனி இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்த வருகிறார்.
இதனை அடுத்து இவர் தற்போது தெலுங்கில் களம் காண இருப்பது அனைவருக்கும் ஆசிரியத்தை தந்துள்ளது. மேலும் இவர் நடிப்பில் வெளிவரவுள்ள தெலுங்கு முதல் படமான கல்யாணம் கம் நீயம் என்ற திரைப்படத்தில் இவர் சந்தோஷ் ஷோபனுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்த படத்தை அனில் குமார் இயக்கி இருக்கிறார். மேலும் இதை குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் எந்த படமானது வரும் பொங்கல் அன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இதே தினத்தில் தான் தெலுங்கில் வெளிவர இருக்கும் தளபதி விஜய்யின் வாரிசுடு படமும் வெளியாக உள்ள நிலையில் இவர் படம் அந்தப் படத்தோடு போட்டி போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்துக்கு ஈடு கொடுத்து இவர் நடித்திருக்கும் படம் இருக்குமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியவரும்.எது எப்படியோ அக்கட தேசத்திலும் தனது திறமையை முழுமையாக காட்டி அங்கும் பல டஜன் கணக்கில் படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் இவர் படத்தை பார்த்து தெலுங்கில் ரசிகர்கள் வட்டாரமும் அதிகரித்து அவரது ரசிகர்களின் படை அதிகரிக்கும் என்று தற்போது தமிழ் ரசிகர்கள் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.
இதனை எடுத்து இவர் தான் இந்திய நடிகையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.