தமிழில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.
இந்த சூழ்நிலையில் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்காண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து பெற்று விட்டார்கள்.
அண்மையில் வினோத நோயான மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் இவர் நோயின் தாக்கத்தின் காரணமாக நீண்ட நாட்களுக்கு சினிமாவில் நடிப்பது சிரமம் ஆகும்.
எனினும் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த யசோதா படம் பேசும்படியான வெற்றியை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவர இருக்க கூடிய சாகுந்தலம் படமும் பெண்மையை மையமாகக் கொண்ட வரலாற்று கதை அம்சமான படம் என்பதால் இதை பார்ப்பதற்கான ஆவலில் அனைத்து மக்களும் காத்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இன்ஸ்டாகிராமில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எல்லாம் மீண்டு வா தலைவி என்று அவருக்கு ஆதரவாக நிறைய பாசிட்டிவ் கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தில் அவரது முகம் சற்று வாடி இருப்பது போல் தான் உள்ளது. எனினும் அவர் கையில் வைத்திருக்கும் மாலையைப் பார்த்த பிறகு பலரும் பல விதத்தில் கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஏதோ ஒரு வகையில் ஒரு நம்பிக்கை அவரிடம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அந்த ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கையின் காரணமாக அவர் விரைவில் மீண்டும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து வெளிவருவார் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள்.
க்யூட்டாக வெள்ளை நிற புடவையில் காட்சியளிக்கும் சமந்தா விரைவில் தனது நோயின் தாக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று இவரது ரசிகர்கள் அனைவருமே தற்போது இறைவனிடம் பிரார்த்தித்து வருவதால் அவர் அவர்களது ஒருமித்த பாசிட்டிவ் வைப்ரேஷன் கண்டிப்பாக அவரை மீட்டுக் கொண்டு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து வரலாற்று சாதனை புரிய உதவி செய்யும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.