நான் அம்மாவாக தயாராகி விட்டேன் என்று நடிகை பூர்ணா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. கேரளா நடிகையான இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும்.
சினிமாவில் நடிப்பதற்காக பூர்ணா என்ற தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். சினிமாவில் ஹீரோயினாக பயணித்த இவர் தற்பொழுது ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆடுபுலி தகராறு கந்தகோட்டை அடங்கமறு காப்பான் தலைவி உள்ளிட்ட பல்வேறு படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
இவருடைய சொந்த ஊர் கேரளாவில் உள்ள கண்ணூர் ஆகும் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் நாங்கள் பல நகைக்கடைகளை வைத்திருக்கிறோம் பல எண்ணெய் கிணறுகளை வைத்திருக்கிறோம் என்று கூறி நடிகை பூர்ணாவை திருமணம் செய்ய அனுகி இருக்கிறது ஒரு கும்பல்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் எண்ணெய் கிணறு வைத்திருக்கவில்லை நகை கடையும் வைத்திருக்கவில்லை கேரளாவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் செல்போன்களுக்கு பேக் கேஸ் மற்றும் டெம்பர்ட் கிளாஸ் ஓட்டும் வேலையை செய்யக்கூடிய நபர்கள் என்பதை தெரிந்து கொண்டார் நடிகை பூர்ணா.
இதனால் உஷாரான இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்தனர். இது பயங்கர பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் நிஜமாகவே துபாயில் எண்ணெய் கிணறு வைத்திருக்கக்கூடிய ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அம்மணி.
இந்நிலையில் தற்பொழுது நான் அம்மாவாக தயாராகி விட்டேன் என்னை வாழ்த்துங்கள் என்று கூறும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஆம் நடிகை பூர்ணா தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட இவரது வீடியோ காட்சிகள் சில இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு வருகின்றது.