பிரபல நடிகை அனுஷ்கா கடைசியாக பாகமதி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்நிலையில் அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கும் நடிகை அனுஷ்கா அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.
தற்பொழுது தன்னுடைய 48வது படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா இந்த படத்தில் சமையல் கலைஞராக நடித்து வருகிறார். சமீபத்தில் மங்களூரில் நடைபெற்ற பூதகோலா என்ற விழாவில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்ட நடிகை அனுஷ்கா இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பூதகோலா என்ற நிகழ்வு காந்தாரா படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும் காலம் காலமாக இந்த பூதகோலா நிகழ்ச்சி விழாவாக நடைபெற்று வருகிறது என்றாலும் கூட காந்தாரா திரைப்படம் இதனுடைய தார்பரிகம் என்ன..? இதனுடைய மகத்துவம் என்ன..? என்பதை ரசிகர்களுக்கு ஒரு திரைப்படமாக கண்களில் முன் காட்டியது.
இதனால் பூதகோலா நிகழ்ச்சி மட்டுமல்லாமல் பொதுவாகவே குலதெய்வ வழிபாடு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை ரசிகர்கள் உணர்ந்தனர் என்று தான் கூற வேண்டும்.
சமீபத்தில் காந்தாரா படத்தை பார்த்த நடிகை அனுஷ்கா பழக்குழுவினரையும் இயக்குனர் ரிஷப் செட்டியையும் பாராட்டி தன்னுடைய சமூகவலை பக்கங்களில் பதிவுகளை எழுதி இருந்தார் என்பது இங்கே குறிப்பிட தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மாடி எத்தன தண்டி அனுஷ்கா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்