படுக்கை அறை காட்சி நடிக்கும் பொழுது என்னை நான் இப்படித்தான் உணர்வேன் என்று நடிகை தமன்னா வெளிப்படையாக கூச்சமே இல்லாமல் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் தெலுங்கு என இரு முறைகளிலும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தமன்னா தற்பொழுது பாலிவுட்டிலும் கதாநாயகியாக அடி எடுத்து வைத்திருக்கிறார். தொடர்ந்து இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது.
இவர் அறிமுகமானதே பாலிவுட் படத்தில் தான் என்றாலும் கூட தென்னிந்திய சினிமாதான் இவருக்கு நடிகை என்று அங்கீகாரத்தை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் கொடுத்து அழகு பார்த்தது என்பது மறக்க முடியாத உண்மை.
தமிழில் கடைசியாக ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அம்மனே அதோடு இவருடைய தமிழ் திரைப்பட வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை குறிப்பாக தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருக்கிறார் என்ற தகவல் மட்டும் இருக்கிறது இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து பாலிவுட் நடிப்பதில் கவனமாக இருக்கும் நடிகை தமன்னா சமீபத்தில் பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் நடித்திருந்த ஹீரோவுடன் படு சூடான நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் எடுத்து ரசிகர்களை அதிர வைத்தார் இதைத் தாண்டி அதிர்ச்சி என்னவென்றால் அந்த நடிகரை நடிகை தமன்னா காதலிக்கிறார் என்றும் அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் தன்னுடைய காதலருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கு அறிவிக்கும் விதமாக ஒரு வீடியோ காட்சியும் கடைசி தமன்னா வெளியிட்டு இருந்தார் இந்நிலையில் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கும் பொழுது தனக்கு ஏற்படும் அப்படியான உணர்வுகள் பற்றி ஓப்பனாக கூறியிருக்கிறார் நடிகை தமன்னா.
அவர் கூறியதாவது அப்படியான படுக்கை அறை காட்சிகளை நடிகர் நடிகைகள் இருவருமே விரும்புவது கிடையாது. ஆனால் படத்தின் கதைக்காக அப்படியான காட்சிகள் தேவை என்ற நிலைமை வரும்பொழுது அப்படியான காட்சிகளின் நடிக்க கூடிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருவருமே சங்கடமான மன நிலையில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
நடிகைகள் மட்டும்தான் இங்கே சங்கடப்படுவார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நடிகர்களுமே சங்கட்டப்படக் கொண்டுதான் நடிப்பார்கள். என்னதான் இருந்தாலும் அவர் ஒரு நடிகை என்பதை தண்டு வேறு ஒரு பெண்.
தன்னுடன் இப்படியான காட்சி நடிக்கும் போது அவருடைய மனநிலை எப்படி இருக்கும் என்ற ஒரு குழப்பமான மன நினையில் தான் நடிகர்களும் இருப்பார்கள். அவர்களுமே மனதில் பல கேள்விகளுடன் தான் இருப்பார்கள்.
இந்த கேள்விகள் இந்த குழப்பங்கள் எதுவுமே கேமராவின் கண்களில் பதிவாகாத வண்ணம் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவே எந்த ஒரு மன நெருடலும் இல்லாமல் படத்தின் கதைக்காக நடிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இயக்குனர் சொன்னதை அப்படியே செய்து கொடுப்பதுதான் ஒரு நல்ல நடிகர் நடிகைகளுக்கு இருக்கக்கூடிய அம்சமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதைத்தான் நான் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை தமன்னா.