மலையாளத் திரைகளில் 2000 ஆண்டு வெளி வந்த இங்கன ஒரு நீலபக்ஷி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. இவரின் சிரிப்பால் கவர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இவரை புன்னகை அரசி என்ற அடைமொழி தந்து அழைத்தார்கள்.
இவரின் சிறப்பான நடிப்புத் திறனை பார்த்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. அந்த வகையில் இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்தார். இதன் பிறகு தெலுங்கு படத்திலும் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் தென்னிந்திய மொழிகளில் நடித்து பேமஸ் ஆனார்.
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் மூலம் தனது அழகிய பல்வரிசையை காட்டி ரசிகர்களின் மத்தியில் பெரும் புகழ் அடைந்தார்.
ஆரம்ப காலகட்டங்களில் பட வாய்ப்பு பெற கஷ்டப்பட்ட பின்பு இவர் அதன் பிறகு கிடைத்த வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு பல முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் ஆரம்ப காலத்தில் இவர் பட வாய்ப்பைத் பெற கஷ்டப்பட்ட சூழ்நிலையில் என்ன நடந்தது என்பது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
இந்த தகவலின் படி இயக்குனர் கே சுரேஷ் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னவளே இப்படத்தில் சினேகா மணிவண்ணன், வையாபுரி பலரும் நடித்திருந்தனர்.
ஆனால் இந்த முதல் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது சிம்ரன் தான் அந்த நேரத்தில் அவர் பிஸியாக இருந்த காரணத்தால் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் அடுத்த வாய்ப்பு நடிகை ஜோதிகாவுக்கு தான் சென்றது.
ஆனால் அவரும் வேறொரு படத்தில் படு பிசியாக இருந்ததன் காரணத்தினால் சினேகாவை நடிக்க வைக்க கே. சுரேஷ் விரும்புகிறார். ஆனால் ஆரம்பத்தில் சினேகாவுடன் இணைந்து நடிக்க மறுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.
இதனால் இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்க சினேகாவை இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் மாதவன் ஒப்புக்கொண்டாராம். இந்த பேச்சு தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.