நடிகை அஞ்சலி தன்னுடைய சிறந்த ஆண் நண்பர் என்று குறிப்பிட்டு தன்னுடைய நாய்க்குட்டியை மார்போடு அணைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் .
தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி அதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தார்.
குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான அங்காடி தெரு என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி நடித்த நடிகை அஞ்சலிக்கு பல்வேறு விருதுகள் குவிந்தன. இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த இளம் நடிகர் ஜெய் உடன் காதல் வயப்பட்டார்.
தொடர்ந்து அவரை காதலித்து வந்த நடிகை அஞ்சலி படத்திலும் நடித்து வந்தார் ஆனால் ஒரு கட்டத்தில் படத்தில் நடிப்பதை விட்டு விட்டு நடிகர் ஜெய்வுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் என்று கூறப்பட்டது இது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் நடிகர் ஜெய்வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார் நடிகை அஞ்சலி தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை அஞ்சலிக்கு ஆரம்பத்தில் கிடைத்தது போல பட வாய்ப்புகள் தற்போது கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. காரணம் வாய்ப்புகள் கிடைத்த பொழுது காதலை காரணம் காட்டி பட வாய்ப்புகளை தட்டிக் கழித்த நடிகை அஞ்சலிக்கு தற்பொழுது காதல் முறிந்து போன பிறகு
பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை நடிகைகள் பட வாய்ப்புக்காக படாத பாடுபட்டு வரும் சூழ்நிலையில் சில நடிகைகள் காதல்.. திருமணம்.. என சினிமாவிலிருந்து ஒதுங்கி சென்று விட்டு அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தால் சினிமா அவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்ன..? அதற்குள் அவர்களுடைய இடத்தை பல நடிகைகள் நிரப்பி இருப்பார்கள்.
அதுபோலத்தான் நடிகை அஞ்சலியின் நிலையும் தற்பொழுது பரிதாபமாக இருக்கிறது. இருந்தாலும் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி மறுபக்கம் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட சொன்னாலும் சரி ஆடுகிறேன் என்று உடனே ஒப்புக்கொண்டு ஆட்டம் போட்டு தன்னுடைய வங்கி இருப்பதை உயர்த்துவதில் முனைப்பு காட்டி வருகிறார் அம்மணி.
மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.