பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பணத்திற்காகத்தான் நான் நடிக்க வந்தேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் சின்னத்திரையில் நடித்து பிரபலமான இவர் தற்பொழுது வெள்ளி திரையிலும் முன்னணிக்குதா நாயகியாக கலந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் கமணீயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது.
தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் குறித்து பல்வேறு தொலைக்காட்சிகளில் இணைய ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர் அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பிரியா பவானி சங்கர் சினாமாவில் நான் நுழையும் பொழுது மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா..? இல்லையா..? என்பதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவே இல்லை.
இயல்பான ரசிகர்கள் ரசிக்கும் விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தேன் அது மக்களுக்கு பிடித்துப் போனதால் என்னையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
எதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அதுபோலத்தான் திருச்சிற்றம்பலம் படத்தில் சில நிமிடங்கள் தோன்றக்கூடிய கதாபாத்திரம் என்றாலும் கூட மனநிறையுடன் அந்த படத்தில் நான் நடித்தேன் மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படங்களில் நான் நடிக்கவில்லை.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக தான் படத்தில் நடிக்க வந்தேன். பணம் வந்தது. பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களே திரை உலகில் கடினமாக பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நான் அதிகமாக உழைக்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டே இருக்கிறேன்.
முதலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் இணைய பக்கங்களில் முட்டி தெரியும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டாலே அதனை கவர்ச்சி என்று கூறுகிறார்கள் சுடிதார் போட்டாலும் கவர்ச்சி புடவை கட்டினாலும் கவர்ச்சி நைட் போட்டாலும் கவர்ச்சி என்று சொன்னால் எப்படி முதலில் கவர்ச்சி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று இருக்கிறார்.
மேலும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்ற ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் அம்மணி. சமீபத்தில் தான் தன்னுடைய காதலனுடன் புதிய வீட்டில் குடியேறி இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் ஏற்கனவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வரும் இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று கூறியிருப்பது ரசிகர்களை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.