திரை உலகில் தன்னை வளர்த்து விட்ட அந்த முக்கியமான நபரை ராஷ்மிகா மதிக்காமல் விட்டுவிட்டார். எனினும் இதுவரை பொறுத்து இருந்த அவர் அவருக்கான தக்க பதிலடி சரியான சமயத்தில் கொடுத்திருக்கிறார்.
நடிகை ராஸ்மிகா க்ரிஷ் பார்ட்டி எனும் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின்னர் கீதகோவிந்தம் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஒரு பேன் இந்திய நடிகையாக உருவெடுத்து இருக்கும் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்குகிறார். தென்னிந்திய திரைப்பட உலகமே கொண்டாடக்கூடிய நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் பாலிவுட் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இவர் அண்மையில் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கல் விருந்தாக திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை அடுத்து பல பேட்டிகளை தந்து இருக்கக்கூடிய இவர் தன்னை வளர்த்து விட்ட கன்னட படத்தைப் பற்றியோ, அந்த டைரக்டர் பற்றியோ எந்த ஒரு இடத்திலும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையை கூட இதுவரை கூறியது கிடையாது.
இதனங கடுமையான கடுப்பில் இருக்கும் கன்னட திரை உலகம் தற்போது நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷிப் செட்டியிடம் அவருடைய அடுத்த படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பை ராஷ்மிகாவுக்கு கொடுப்பாரா என்ற கேள்வியை எழுப்பிறார்கள்.
அதற்கு பதில் அளித்த ரிஷிப் இந்த நிகழ்ச்சி முடிந்து அடுத்து நான் எங்கே செல்வேன் என்று எனக்குத் தெரியாது. எனவே அதைப்பற்றி என்னால் இப்போது கூற முடியாது என்று கூறிவிட்டார்.
இதனை அடுத்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் ராஷ்மிகாவை குறித்து அவர் மகிழ்ச்சியை தெரிவித்து இருப்பதோடு இவருடைய இந்த பதிலில் மிகவும் பெருத்தன்மை வெளிபட்டு இருப்பதாக அனைவரும் கூறி வருகிறார்கள்.
இவ்வளவு பெரிய நடிகையாக வளர்ந்திருந்தாலும் வந்த பாதையை மறந்து விடாமல் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் இதை ராஷ்மிகா உடைந்து இனியாவது செயல்படுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.