தென்னிந்திய திரைப்பட நடிகையான இவ்வானா தமிழில் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஹீரோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு இவர் ஜோதிகா நடித்த படமான நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார்.மேலும் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமான இவர் தற்போது முன்னணி நாயகர்களோடு இணைந்து நடித்து வருகிறார்.
தனது நடிப்பாலும் அதிக இளமையாலும் ரசிகர்களை கட்டி போட வைத்திருக்கும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். இவரின் எதார்த்தமான நடிப்பு இவரது கண்களில் கூட பிரதிபலிக்கும் என்று கூறலாம்.அந்த அளவு ரசிகர்களின் இதயத்தில் தற்போது கனவு நாயகியாக குடியேறியிருக்கும் இவர் லவ் டுடே படத்தில் நடித்திருந்த விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர்களையே இழந்தார்கள் என்று கூறலாம்.
அந்தளவுக்கு தத்துருபமாக தனது நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். லவ் டுடே படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புதிய புகைப்படங்களை பதிவிட்டு கொண்டே வருகிறார்கள்.
அதன் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் இப்படி பண்ணுகிறாரா என்று தோன்றக்கூடிய அளவில் இவரது ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.
இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கிவிட்டார்கள். பலம் தின்று கொட்டையை போடும் அணில்களை பார்த்த மனிதர்களுக்கு இவர் வீட்டு மாடியில் நின்று பழங்களை சேர்ப்பது போல் உள்ள வீடியோவைப் பார்த்து பிரம்மிப்பாகிவிட்டது.
ஏற்கனவே லவ் டுடே படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவையும் ட்ரெண்டிங் ஆக்க வேண்டும் என நோக்கத்தில் பலருக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆக்கிவிட்டது. இப்படி ஒரு தேவதையே பழம் பறிப்பதை பார்த்து அந்தப் பழம் தனக்கு கிடைக்குமா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.