சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிவிங் டுகெதர் ( Living Together ) முறையில் வாழ்ந்து வந்த தம்பதிகள் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சென்னை பெரியமேடு அடுத்த சூளை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயது சந்தீப் ஜெயின் என்பவரும் 35 வயது இளைச்சி என்பவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவின் டுகெதர் முறையில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் இளைச்சி சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்ததாகவும் சந்திப் ஜெயின் மட்டும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
லிவிங் டுகெதர்…
சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்தவர் சந்தீப். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை பிரிந்து விட்ட நிலையில் தற்போது துணிக்கடை வைத்து நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் இளச்சி என்பவருடன் பழக்கம் ஏற்ப்பட்டு நாளடைவிடைல் காதலாக மாறியது. இளச்சியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக லிவிங் டுகெதரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
போரடித்ததால் அடுத்த ஆளை தேடிய இளச்சி..
இந்த நேரத்தில் சந்தீப் உடனான லிவிங் டுகெதர் வாழ்க்கை போரடித்ததால் இளச்சி பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் செல்வதற்காக தயாராக இருந்துள்ளார். அதுவரை அமைதியாக இருந்த சந்தீப் இத்தனை நாள் என்னுடன் இருத்துவிட்டு இப்போது தனியாக விட்டு செல்கிறாயா.. என்று வாய்தகாராரில் ஈடுபட்டுள்ளது.
இந்த சமயத்தில் பிரச்சனை அதிகரிக்கவே அருகில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி இளச்சியை கொலை செய்துள்ளார். பின்னர் அதே தீயில் சந்தீப் தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.