தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி உடன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பொழுது அந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்ட நடிகை நயன்தாரா அவரை கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
தற்பொழுது அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார் நடிகை நயன்தாரா.
கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து தற்பொழுது திருமண பந்தத்தில் இருந்திருக்கும் நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இதற்கு காரணம் இவர் நடிப்பில் வெளியான சமீபத்தில் திரைப்படங்கள் சில தோல்வி அடைந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த படங்களை மறைமுகமாக தயாரித்தது நடிகை நயன்தாரா தான் என கூறப்படுகிறது.
எனவே இவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை சரிகட்டும் விதமாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா.
மறுபக்கம் தன்னுடைய கணவரின் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் முழு பங்குதாரராக இருக்கிறார் நடிகை நயன்தாரா. அந்த ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் பெயரில் இருக்கிறது என்றாலும் கூட அதில் புணங்கும் பணம் அனைத்துமே நடிகை நயன்தாரா உடையது என்று கூறுகிறார்கள்.
மறுபக்கம் அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில் கலந்து கொண்டு வரும் நடிகை நயன்தாரா சமீபத்தில் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அவ்வப்போது அழகு பதுமையாக அளவான மேக்கப் உடன் தோன்றியிருந்த நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நயன்தாராவின் முக அழகு அப்பட்டமாக தெரிய பளிச்சென இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து சொல்லிவிட்டு வருகின்றனர்.