தமிழ் சினிமாவில் 90 களின் காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. இவர் ரஜினி, கமல் என முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடித்தவர்.
மேலும் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்தவர். படு பிஸியான இவர் 1998 ஆம் ஆண்டு சந்திப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் சுப்புலட்சுமி.
விவாகரத்து பெற்ற பின் தனித்து வாழ்ந்து வரும் இவர் கமலஹாசனுடன் சில ஆண்டுகளாக படு நெருக்கமாக இருந்திருக்கிறார். குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.
இதனை அடுத்து தனது மகளின் எதிர்காலத்தை முன்னிட்டு கமலஹாசனை விட்டு பிரிந்து தற்போது மகளோடு தனித்து வசித்து வருகிறார். 23 வயதை எட்டி விட்ட அவரது மகளை தற்போது கதாநாயகியாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்.
அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வரும் கௌதமி சரியான கதை அமைந்தால் தனது மகளை கதாநாயகியாக களம் இறக்கி விடுவார். இதனை அடுத்து கௌதமி மற்றும் சுப்புலட்சுமி இணைந்திருக்க கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில் கௌதமி அன்று பார்த்தது போல் என்றும் அதே இளமையோடு தான் இருக்கிறார். இதனை அடுத்து சில ரசிகர்கள் கமலின் மகள் சுருதிஹாசனை விட சுப்புலட்சுமி கூடுதல் அழகோடு இருக்கிறார் என்று பேசி வருகிறார்கள்.
அடுத்து இவரை விரைவில் கதாநாயகியாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சந்தோஷமான செய்தியை நீங்கள் கூற வேண்டும் என்று கூறியது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. எனவே பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் இவர் நடிகையாக களம் இறக்கப்படுவாரா? என்று உனக்காக ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.