பிரபல நடிகை கஸ்தூரி நட்ட நடு ராத்திரியில் நீச்சல் குளத்தில் குளுகுளு குளியல் போடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.
ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். குழந்தை பிறந்த புதிதில் தாய்ப்பால் கொடுப்பதன் மகத்துவத்தை உணர்த்தும் விதமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார் நடிகை கஸ்தூரி.
அதில் மேலாடை எதுவும் அணியாமல் தன்னுடைய அழகு அப்பட்டமாக தெரியும் அளவுக்கு சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். இது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போன இவர் சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அரசியல் சினிமா மற்றும் பொதுநலம் சார்ந்த விவகாரங்களில் தன்னுடைய கருத்து என்ன என்பதை வெளிப்படையாக போட்டு உடைக்கிறார். இதனால் அடிக்கடி சர்ச்சைகளும் சிக்கிக் கொள்கிறார் என்று கூறலாம்.
இவர் தெரிவிக்க கூடிய கருத்துக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து சமூக ஈடுபாட்டில் கவனம் செலுத்திக்கொண்டு சினிமாவிலும் கவனம் செலுத்தி கொண்டு வருகிறார்.
View this post on Instagram
மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்பொழுது நட்ட நடு ராத்திரியில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளுகுளு குளியல் போடும் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலைக்கு வருகின்றது.