இந்த தேசத்திற்க்காக நல்ல முறையில் சமுதாயத்துக்காக சேவை செய்தவர்களுக்காக பல நிறுவனங்கள் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசன் – க்கு தற்போது பவர் காரிடர்ஸ் இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சினிமாக்களின் முன்னணி நடிகையாக திகழக்கூடிய இவருக்கு சிறந்த பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமையை கொண்டவர். இவரது நடிப்பில் லாபம் என்ற படம் சக்கை போடு போட்டது.
தற்போது இவரது நடிப்பில் வெளி வந்துள்ள வீர சிம்மா ரெட்டி மற்றும் வால்டர் வீரையா போன்ற படங்கள் இவர் பெயர் சொல்லும் படி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு நல்ல ஆதரவை தந்திருக்கிறார்கள்.
மேலும் இவர் சலார் , தி ஐ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஆங்கில படத்திலும் நடித்து வரும் இவர் நடிப்போடு நின்று விடாமல் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் விஞ்ஞான பவனில் வைத்து நடிகை சுருதிஹாசன் பவர் காரிடர்ஸ் என்ற இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கி இருக்கிறார்.
நாட்டுக்காக பாடுபடக்கூடிய இளம் சமூக சேவகியாக தேர்வு செய்யப்பட்ட சுருதிஹாசன் இந்த விருதை வாங்கியது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மேலும் கலைப்பணியில் இருக்கும் தனக்கு இது போல ஒரு விருது கொடுத்திருப்பதால் மேலும் பல சேவைகளில் ஊக்கமாக செயல்பட இது உதவும் என்று கூறி இருக்கிறார்.
இதனை அடுத்து பலரும் சுருதிஹாசனை பாராட்டி இருப்பதோடு WWF இந்தியா twitter பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அம்பாசிடராக இந்த அமைப்பு இவரைக் தேர்ந்தெடுப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதோடு இவரை போலவே அனைவரும் சமூக சேவையில் ஈடுபட்டால் கலாம் ஐயா கண்ட கனவை நிறைவேற்றலாம் என்று கூறி இருக்கிறார்கள்.