தமிழில் இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அந்நியன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் திரைத் துறையில் பயணித்து வரும் நடிகை சதாவுக்கு தற்போது 38 வயது ஆகின்றது. பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவர் மற்றும் திருமணம் குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகை சதா கிட்டத்தட்ட 40 வயது நெருங்கி விட்ட போதும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு பேட்டியில் இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை சதா, திருமணம் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு.
நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா..? வேண்டாமா..? என்பதையே நான் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் வேறு யாருக்கும் உரிமை கிடையாது என்று பேசி இருக்கிறார்.
மேலும் என்னுடைய மகிழ்ச்சிக்காக இன்னொருவரை சார்ந்து இருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார் நடிகை சதா. தனக்கு வரும் கணவர் மற்றும் அவருடைய உழைப்பை நம்பி நான் இருக்கக் கூடாது என்று பேசி இருக்கிறார்.
இதை கேட்ட ரசிகர்கள் பலரும் நடிகை சதாவை கடுமையாக விளாசி வருகிறார்கள். இதேபோல உங்களுடைய தாய் நினைத்து இருந்தால் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள்.
இப்படி காலத்திற்கு உதவாத வீணாய் போன கருத்துக்களை கூறிக்கொண்டு திருமணத்தை இதனால் தான் நான் செய்யவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையான காரணம் என்ன..? என்பதை உங்களால் கூற முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள். எதற்காக இப்படி பூசி மழுப்பி கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய கருத்துக்கள் சமூகத்தில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே, பிரபலங்கள் இப்படியான ஒன்றுக்கும் உதவாத கதைகளை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விளாசி வருகின்றனர்.