” பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டவில்லையா..!” வித்யா சக்தியை அதிகரிக்க முருகரை வழிபட படிப்பில் ஏற்றம் வரும்..!!

 இன்று இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் படிப்புக்காக எண்ணற்ற வழிகளில் உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் பணத்தை பெரும் அளவு செலவு செய்து வருகிறார்கள். எனினும் அந்தப் பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருக்கிறார்கள் என்ன செய்தும் படிக்கவில்லை என்ற கவலை உங்களுக்குள் இருக்கிறதா.

 ஆம் என்றால் நீங்கள் இனி அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மந்தமாக படிக்கும் குழந்தைகள் நன்றாக படிப்பதற்கான ஒரு பரிகாரம் உள்ளது. அதை நீங்கள் அந்தப் பிள்ளையை கொண்டு செய்ய வைத்தாலே அவர்கள் படிப்பில் படி ஜோராக வளர்ந்து விடுவார்கள்.

மந்தமாக இருக்கக்கூடிய உங்கள் பிள்ளை நன்றாக படிப்பதற்கு ஆறுமுகனை வழிபடுவது தான் சிறந்த வழி என்று ஆன்மீக நிபுணர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த ஆறுமுகனுக்கு உரிய தினமான செவ்வாய்க்கிழமை அன்று குழந்தையை புத்தகத்தை எடுத்து பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி மனதார தான் படிக்க வேண்டும் என்று அந்த குழந்தையை வேண்டிக் கொள்ளச் சொல்லுங்கள்.

 அவ்வாறு அந்த குழந்தை வேண்டிக் கொள்ளும் போது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் நிவர்த்தியாகி படிப்பில் அக்கறை காட்டுவார்கள் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

 மேலும் ஞாபக சக்தி குறைவாக இருக்கக்கூடிய மாணவர்கள் வியாழக்கிழமை அன்று சூரியன் மறைவதற்கு முன்பு மாலை 5:30 மணி அளவில் ஒரு வாழை இலையில் ஐந்து வகை இனிப்பு, இரண்டு ஏலக்காயை வைத்து அரச மரத்தடியில் இருக்கக்கூடிய ஈ, எறும்புக்கு தானம் செய்ய வேண்டும்.

இல்லையெனில் அந்த இனிப்பு வகைகளையும், ஏழைக்காயையும் ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுத்தால் ஞாபக சக்தி வளரும் என்று கூறி இருக்கிறார்கள்.

 இந்த தானத்தை உங்கள் குழந்தைகள் அவர்கள் கையால் செய்வது மிகவும் சிறப்பானது. மேலும் ஶ்ரீ வித்யா எந்திரத்தை வாங்கி குழந்தைகளுக்கு கட்டி விடுவதோடு ஶ்ரீ வித்யா மந்திரத்தை தினமும் உச்சரிக்க சொல்லுவதின் மூலம் அவர்கள் கல்வியில் சிறந்த நிலையை அடைய அது ஏதுவாக இருக்கும்.

 மேற்கூறிய பரிகாரங்களை நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கொண்டு செய்யும்போது கட்டாயம் குழந்தைகள் கல்வியில் நல்ல நிலையை எட்டி விடுவார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …