ராமராஜனை விரட்டி பிடித்து கமல்ஹாசன் கேட்ட கேள்வி..! – என்ன கேட்டார் என்று தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!

ஒரு காலத்தில் நடிகர் ராமராஜன் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்-க்கு போட்டியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதிலும் இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் திரையரங்குகளில் கூட்டமே இல்லாமல் இருந்தது.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த படத்தின் ஓட்டம் விண்ணை முட்டியது என்று தான் கூற வேண்டும். இந்த படம் கடந் 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியான ஒரு வாரம் பெருவாரியான ரசிகர்களால் விரும்பப்படவில்லை.

ஆனால் அடுத்தடுத்து நாட்களில் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது ஒரே திரையரங்கில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த காலகட்டத்தில் நடிகர் ராமராஜன் வருடத்திற்கு ஐந்து படங்கள் என நடித்து வந்தார்.

கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியான பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் 30 படங்களில் நடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு பிரபலமான நடிகராக இருந்தார் நடிகர் ராமராஜன்.

ஆனால் இடையில் ஏற்பட்ட விபத்து மற்றும் அரசியல் என சினிமாவிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்த இவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

ஆனால் இன்று வரை நடித்த ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து வருகிறார். தற்போது வரை இவர் நடித்த படங்களில் இவர்தான் ஹீரோ.  துணை நடிகராகவோ அல்லது துணை கதாபாத்திரங்களிலோ குணசத்திர நடிகராகவோ நடிக்கவே மாட்டேன் என்ற உறுதியுடன் இருக்கிறார்.

இவர் மட்டுமல்ல பிரபல நடிகர் மைக் மோகன் அப்படித்தான். இவர் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற கொள்கையில் இருக்கிறார். இருவருக்கும் குணசத்திர வேடங்கள் வில்லங்க கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க அழைப்புகள் வந்தன.

அவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு நடித்திருந்தால் இன்றளவும் இந்த இருவரும் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்திருக்க முடியும். ஆனால் தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருக்கிறது.

கடந்த 1987 ஆம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் பிரபல நடிகர் ராதாரவி ராமராஜன் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

கரகாட்டம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சமயம்.. அப்போது முன்னணி நடிகர்களே ராமராஜனின் வளர்ச்சியை கண்டு ஒரு நிமிடம் ஆடிப் போனார்கள்.

அந்த நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்தார் நடிகர் கமலஹாசன். அதே நேரத்தில் நடிகர் ராமராஜனும் அங்கே வந்திருந்தார். ராமராஜனை பார்த்த கமல்ஹாசன் அவரை விரட்டி சென்று சில நிமிடங்கள் பேசிவிட்டு ராமராஜனின் தலை முடியை பிடித்து இழுத்து இது நிஜமுடியா..? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த சுவாரசியமான இந்த சம்பவம் குறித்து தன்னுடைய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் ராதாரவி.  இவருடைய இந்த பேட்டியை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Summary in English : In Karakattakaran time, actor Kamal Haasan has raised questions on the authenticity of actor Ramarajan’s hair. He grabbed a lock of Ramarajan’s hair and raised doubts about its originality.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …