ஆடிஷனில் என்னுடைய அந்த உறுப்பை பார்த்து இப்படி சொன்னாங்க.. அதிர வைத்த சமீரா ரெட்டி..!

பிரபல நடிகை சமீரா ரெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறது. பொதுவாக சினிமா நடிகைகளுக்கான சில அம்சங்கள் இருக்கின்றது.

அந்த அம்சங்கள் அனைத்தும் பக்காவாக பொருந்தி வரும் நடிகைகளுக்கு மட்டுமே சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே அந்த அம்சங்களை இயற்கையாக கொண்டிருக்கும் நடிகைகள் மட்டுமே சினிமாவில் ஜொலிக்கிறார்கள்.

இன்னும் சில நடிகைகள் அந்த அம்சங்களை செயற்கையாக இம்பிளான்டேஷன் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சை துணைகொண்டு பெறுகிறார்கள்.

நடிகை என்றால் எடுப்பான முன்னழகமற்றும் எடுப்பான பின்னழகு இருக்க வேண்டும் முகம் அழகாக இருக்க வேண்டும் தொடை அழகு பளிச்சென இருக்க வேண்டும் தொப்பை இருக்கக் கூடாது இப்படி சில எழுதப்படாத விதிகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

எனவே ஆடிஷனில் கலந்து கொள்ள வரக்கூடிய நடிகைகளிடம் இவை அனைத்தும் பக்காவாக பொருந்தி இருக்கிறதா என்பதை இயக்குனர்களும் கேமராமேனும் சேர்ந்து பரிசோதிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது.

இதனை நடிகைகள் பலரும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். இன்னும் சிலர் இதனை படமாகவே எடுத்து கூட வெளியிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நான் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆடிசனுக்கு சென்று இருந்தேன். அப்போது என்னை பார்த்த இயக்குனர் சில காட்சிகளை சொல்லி நடிக்க சொன்னார்கள். நானும் நடித்துக் காட்டினேன்.

என்னுடைய நடிப்பு.. அழகு.. எல்லாமே சரி என்று கூறியவர்கள் சிறிது நேரம் கழித்து உங்களுடைய மார்பை மட்டும் பெரிதாக்கி கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள்.

எனக்கு அடுத்ததாக என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. அந்த நொடியில் என்னுடைய தன்னம்பிக்கை முழுதும் சுக்கு சுக்காக உடைந்து போனதாக உணர்ந்தேன்.

அவ்வளவு மன வேதனையை மனதில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். ஆனாலும், அவர்கள் கூறிய அந்த விஷயம் எனக்குள் உருத்திக்கொண்டு இருந்தது.

அதன் பிறகு நாட்கள் செல்லச் செல்ல எதற்காக நாம் நம்முடைய இயற்கையான அழகை நினைத்து வருத்தப்பட வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவிற்கு இருப்பதில்லை என்று ஆறுதல் கொண்டேன்.

அதன்பிறகும் பட வாய்ப்புகளை தேடுவதில் முயற்சி செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது நான் குண்டாக இருக்கிறேன். என்னுடைய சதைகள் தொளதளவென இருக்கின்றன.

ஆனாலும் என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன். ஒருவர் தன்னை கவர்ச்சியாக உணர்வதற்கு அவருடைய மனது தான் முக்கியம். அவருடைய உடல் எடையோ.. வயதோ.. ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நான் அடிக்கடி கூறி வருகிறேன்.

எனவே ஆண்டவன் இறைவன் கொடுத்த இயற்கையான அழகை கண்டு நாம் எப்போதும் வருத்தப்பட தேவையில்லை. வெள்ளையாக இருக்கிறோம்.. கருப்பாக இருக்கிறோம்.. குண்டாக இருக்கிறோம்.. ஒல்லியாக இருக்கிறோம்.. என்று நாம் வருத்தப்பட தேவையே கிடையாது.

அதுதான் நம்முடைய அடையாளம்.. நம்முடைய அடையாளத்தை கண்டு நாம் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று பேசி இருக்கிறார் சமீரா ரெட்டி. இவருடைய அந்த பேச்சு பரபரப்பை கிளப்பி இருந்தாலும் கூட பலதரப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் அமைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

Summary in English : Sameera Reddy is an actress who has come a long way in the entertainment industry. She recently shared her painful moments while attending auditions on her initial days as an actress.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …