“எலும்பு தேய்மானம் … அவஸ்தையா..!” Don’t Worry எழும்பு தேய்மானத்தை குணமாக்கும் அற்புத மருந்து..!

30 வயதை கடந்து விட்டாலே மனதுக்குள் பக் பக் என்று பயம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஆரம்பிப்பதற்கு இது சரியான வயது என்று அனைவரும்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 மேலும் வயது எலும்பு தேய்மானத்திற்கு ஒரு பொருட்டல்ல. உடலின் வளர்ச்சிக்கு ஏற்றபடி எலும்புகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. மேலும் அவர்கள் செய்யக்கூடிய தொழிலை பொருத்தும் உழைக்கும் தன்மையை பொருத்தும் இந்த எலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட எலும்பு தேய்மானத்துக்கு அவர்களது உணவு பழக்க வழக்கம் ஒரு காரணமாக உள்ளது.

 இந்த எலும்பு தேய்மானத்தை மருந்துகள் ஏதும் இல்லாமல் எளிய முறையில் எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்டு மருந்துகளை நீங்கள் பயன்படுத்தும் போது எத்தனை வயதானாலும் உங்கள் எலும்புகள் உறுதியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்

எலும்பு தேய்மானத்தை சரி செய்ய குறிப்புக்கள்

குறிப்பு 1

உங்கள் எலும்பு தேய்மானத்தை சரி செய்யக்கூடிய ஆற்றல் ஆலமரத்தில் இருக்கும் மொட்டுக்களுக்கு உள்ளது. இந்த மொட்டுக்களை நீங்கள் பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு மற்றும் எலும்புக்கு வலிமை அதிகரிக்கும். மேலும் எலும்பு தேய்மானம் தடுக்கப்படும்.

குறிப்பு 2

வீட்டில் நாம் பயன்படுத்தக்கூடிய வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளை கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் என்ற பிரச்சினைக்கு இடம் இருக்காது. பெண்களின் இடுப்பு எலும்பை பலப்படுத்தக் கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

குறிப்பு 3

எலும்புகளில் அதிக அளவு வலி அதுவும் தேய்மானத்தால் ஏற்பட்டு உள்ளது என்றால் அவுரி இலையை நீங்கள் விளக்கெண்ணையோடு சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுத்து வருவதின் மூலம் வலி குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பு 4

மேலும் வாதநாராயண இலை, பூண்டு, மிளகு இதை அனைத்தையும் அரைத்து உள்ளுக்குள் சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்பு தேய்மானத்தை நீங்கள் தடுத்து விடலாம்.

குறிப்பு 5

 கடைகளில் கிடைக்கும் அமுக்குரா கிழங்கு பொடி, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை போன்றவற்றை சமூகமாக எடுத்துக்கொண்டு தினமும் 5 கிராம் அளவு நீங்கள் சாப்பிட்டு வந்தால் கை, கால், மூட்டு வலி இடுப்பு மற்றும் தொண்டை வலி குணமாகும்.

குறிப்பு 6

அத்தி காயை பருப்போடு வேகவைத்து சாப்பிடுவதின் மூலம் உடல் வலிகள் அனைத்தும் குணமாகும். குறிப்பாக மூட்டு வலி, இடுப்பு வலி தண்டுவட சம்பந்தமான கோளாறுகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் இந்த அத்திக்காய்க்கு உள்ளது.

 மேற்குரிய குறிப்புகளை நீங்கள் 30 வயது முதல் ஃபாலோ செய்ய ஆரம்பிக்கலாம். இல்லையென்றால் உங்கள் குழந்தைகளுக்கும் இப்போது இருந்தே இதை கொடுப்பதற்கு பழக்கப்படுத்தி விட்டால் எலும்பு தேய்மானம் என்ற பெயருக்கு நாம் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …