” உங்க வீட்டு பெண் வெள்ளிக்கிழமை இத செஞ்சா..!” – காசு மேல காசு வரும்…!

வாரங்களிலேயே வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள் என்று அனைவருக்கும் தெரியும். எந்த நாளில் வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் விரதம் பூஜை என பல ஆன்மீக வழிகளில் ஈடுபடுவது வழக்கம்.

 அந்த வகையில் வீட்டில் இருக்கும் குறைகள் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருக்கி மகாலட்சுமியின் அருளை பெற வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் உங்கள் வீட்டுப் பெண்களை இதை செய்ய சொன்னாலே போதும். உங்களுக்கு காசு மேல காசு வந்து சேர்வதோடு சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

 வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியது

 வியாழக்கிழமை அன்று உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயார் ஆகி விடுங்கள். பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்தை வைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

 வெள்ளை நிறத்தில் வியாபித்து இருக்கும் மகாலட்சுமியை நீங்கள் வெண் நிற பொருட்களைக் கொண்டு அபிசேகம் செய்வதின் மூலமும் வெண்ணிற பிரசாதங்களை படைப்பதன் மூலமும் வெள்ளி சிலையில் மகாலட்சுமியை நீங்கள் வெண்ணிற ஆடை அணிந்து வழிபடுவதின் மூலம் செல்வத்தை பெருக்கி கொள்ளலாம்.

 மேலும் மகாலட்சுமியானவன் பெருமாளின் மார்பு, பசுவின் பின்புறம், யானையின் மத்தகம், தாமரைப்பூ, திருவிளக்கு, சந்தனம், கன்னிப் பெண்கள், உள்ளங்கை போன்றவற்றில் கூடியிருக்கிறாள்.

 எனவே காலை எழுந்ததும் எந்த பொருட்களை பார்ப்பது உங்களுக்கு அதிகளவு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். புராணங்களின் கருத்துப்படி மகாலட்சுமியானவள் சங்கு, மாட்டு சாணம், நெல்லிக்கனி போன்ற பொருட்களில் வசிப்பதாக கூறப்பட்டிருப்பதால் வீட்டு வாசலில் சங்கு கோலம் போடுவது பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடுவது நன்மை தரும்.

 வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால் நீங்கள் பசு நெய் ஊற்றி இரண்டு முக தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டு அவளின் ஆசியை பெறுவதன் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற முடியும்.

 வீட்டில் இருக்கும் பெண்கள் கை நிறைய வளையல்கள் அணிந்து கொள்வதும், தாலி,  தலைவகடு ஆகியவற்றில் குங்குமம் வைத்துக் கொள்வதும் சிறப்பாகும். அன்னத்தை கணவருக்கும் மற்றவருக்கும் பரிமாறும் போது கட்டாயம் வளையல் அணிந்து பரிமாறுவதின் மூலம் செல்வத்தை பெற முடியும்.

 அதுபோல வீட்டில் இருக்கும் பெண்களை ஆண்கள் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் கண்களில் நீர் வர வைப்பது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது. இவ்வாறு செய்வதின் மூலம் உங்களுக்கு தரித்திரம் ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு செயல்படவும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …