35 நாட்களில் 3 தடவை..! பிரியா பவானி ஷங்கர்-ஐ பார்த்து வாயை பிளந்து கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னணி கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஆரம்ப கட்டத்தில் நடித்து வந்த இவர் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்த பொழுது இவருடைய வேகம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த இவருடைய படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால் ராசியான நடிகை என்ற பெயர் பெற்றிருக்கும் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், நடிகர் சிம்புவின் 10 தல, நடிகர் லாரன்ஸ் உடன் ருத்ரன் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பிறகு டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்பொழுது நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்த வெளியாகியிருக்கின்றன.

அதுவும் 35 நாட்கள் இடைவெளியில் என்பது தான் இங்கே விஷயமே. அந்த வகையில், மார்ச் 10ஆம் தேதி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் , மார்ச் 30ஆம் தேதி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல இந்த படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடித்த திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படி தொடர்ச்சியாக 35 நாட்களுக்குள் மூன்று படங்கள் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாக இருக்கின்றன. இதனால், 35 நாட்களில் 3 தடவை பிரியா பவானி ஷங்கரை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என்ற குஷியில் உள்ளனர் ரசிகர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …