இந்த செடிகள் எல்லாம் உங்க வீட்டின் முன்னால் இருந்தா… உடனடியா நீக்கிருங்க..!!

எதிர்வரும் தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் மரம் நடுதல் கட்டாயம் என்று பேசி வரக்கூடிய நாம் நம் வீட்டுக்கு முன் இருந்த செடிகள் இருந்தால் அதை கட்டாயம் நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

 அப்படி நீக்க வில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு எண்ணற்ற பாதிப்புகள் வரும் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே அவர்கள் கூறிய பாதையில் செல்வது கட்டாயம் நமக்கு நன்மை தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கீழ்க்காணும் செடிகள் உங்கள் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது உங்கள் வீட்டுக்கு முன் பகுதியில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கி விடுங்கள்.

மேலும் இந்த செடிகளின் மூலம் உங்களுக்கு ஆபத்தை ஏற்படலாம் என்பதை உங்கள் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி எந்த செடிகளை நீங்கள் உங்கள் வீட்டின் முன் வளர்க்கக்கூடாது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 அவர்கள் கூறிச் சென்றார்கள் என்றால் அதில் அறிவியல் உண்மையும் உள்ளது என்பதை புரிந்து கொண்டு அந்த செடிகளை உங்கள் வீட்டில் இனி வளர்க்க வேண்டாம்.

 வீட்டுக்கு முன் வளர்க்க கூடாத செடிகள்

 உங்கள் வீட்டின் முன் பகுதியில் ரோஜா, கற்றாழை, அரளி, சீதாப்பழம், முருங்கை, வாழை, தென்னை போன்ற செடிகளை வளர்க்கக்கூடாது என்று கூறுகிறார்கள். இதில் ரோஜா, கற்றாழை, சீத்தாப்பழம் போன்ற செடிகளில் முட்கள் மற்றும் பூச்சிகள் அதிக அளவு இருப்பதால் அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் வீட்டிற்கு முன் வளர்க்க வேண்டாம் என்று கூறினார்கள்.

 இந்த செடிகளை உங்கள் வீட்டில் பின்புறம் வைத்து வளர்த்தல் மிகவும் நல்லது. அதுபோலவே வாழை முருங்கை போன்ற மரங்கள் எளிதில் உடைந்து விடக்கூடிய தன்மை கொண்டு இருப்பதால் அதை வீட்டின் முன் வைக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி கூறியிருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் முருங்கைச் செடியில்  திடீரென கம்பளி பூச்சிகளின் ஆபத்து ஏற்படும். எனவே வீட்டுக்கு முன் அவை அவற்றை வைத்து வளர்க்கும் போது கம்பளி பூச்சி தொல்லையால் நாம் அவதிப்பட வேண்டும் எனவே முருங்கை வீட்டுக்கு முன் ஆகாது என்று முன்னோர்கள் சொன்னார்கள்.

 அரளிச் செடி விஷமுள்ள காயைக் கொண்டது என்பதால் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவே அரளியை வைக்கக்கூடாது என்று கூறினார்கள். அது போலவே சென்னை மரத்திலிருந்து விழக்கூடிய குருத்துகள் யாராவது தலையில் விழக்கூடாது என்பதற்காகத்தான் அதை வீட்டில் பின்புறத்தில் வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். எனவே இந்த செடிகளை உங்கள் வீட்டில் பின்புறத்தில் வைத்து நீங்கள் பயன் பெறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …