புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இப்போது அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் 2023 இறுதிக்குள் மிக பிரம்மாண்டமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை எடுத்து அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் அவருடன் இணை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த படத்திற்காக இவரது சம்பளமும் அதிகரித்துள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி ,விஜய், அஜித் மற்றும் பாலிவுட்டில் சல்மான்கான் ஷாருக்கான் போன்ற நடிகர்கள் மத்தியில் அல்லு அர்ஜுனும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் ராக் ஸ்டார் ஆக இருக்கும் அல்லு அர்ஜுன் இப்பொழுது பாலிவுட்டிலும் களம் இறங்குகிறார். 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் இவரது நடிப்பின் மூலம் இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.இந்த படம் வசூல் ரீதியாக 400 கோடியை எட்டியது இதனால் இவரது புகழ் இந்திய அளவில் பரவியது.
இதன் மூலமாக தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவராக அல்லு அர்ஜுன் திகழ்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர் 125 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் விஜய்,அஜித், ரஜினி என்ற மூன்று பெரிய ஹீரோக்களையும் விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் திகழ்கிறார்.இதன் மூலம் தமிழ் திரைப்பட நடிகர்களான விஜய் அஜித் ரசிகர்கள் நீண்ட மன வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்
மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.