கேரளா நடிகர் மோகன்லால் நடித்த திரைப்படமான கீதாஞ்சலி மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். தமிழ்சினிமாவில் 2015ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரை படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதுதான் தமிழில் இவருக்கு முதல் படம் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை அதற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் ரெமோ போன்ற படங்களில் நடித்தார் இந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது.
ஆனால் தொடரி திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அந்த படம் போதுமான அளவு வரவேற்பை தரவில்லை. இதில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்பு விஜய்க்கு ஜோடியாக நடித்த பைரவா திரைப்படமும் தோல்வியடைந்தது.
தமிழ் சினிமாவைப் போல தெலுங்கிலும் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் இவர் சினிமா வாழ்க்கையில் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது மகாநதி திரைப்படம் திரைப்படம்.
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது மேலும் தேசிய விருதையும் இந்தப் படம் அவருக்கு பெற்று தந்தது.
அதன்பிறகு கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் எந்தப் படமும் இவர் எதிர்பார்த்த அளவில் பெரும் வெற்றியை பெறமுடியவில்லை. இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் போலோ சங்கர்
மாமன்னன், ரகு தாத்தா, சைரன், தசரா மற்றும் ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தனது கையை அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் சிறுவயதில் எடுத்த போட்டோக்களை தன்னுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷின் சிறு வயது போட்டோவை ஆச்சரியத்துடன் பார்த்து லைக் செய்து வருகிறார்கள். இதுபோல பல சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்