பஞ்சுமிட்டாய் கலரில் உடை அணிந்து பளபளன்னு போஸ் கொடுக்கும் சினேகா..!!

நடிகை சினேகா சிரிப்பின் நாயகியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.இவர் நடிகர் பிரசாந்த் அவர்களுடன் ஜோடியாக ‘விரும்புகிறேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆனார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு அற்புதமாக இருந்ததால் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.இதன் நடித்த அனைத்து படங்களிலும் தாவணி மட்டுமே போட்டு நிறைய படங்கள் நடித்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஏனெனில் தாவணி அணியும் வழக்கம் தமிழ்நாட்டில் அதிக பெண்களுக்கு இருப்பதால் தமிழ்நாட்டு ரசிகர்கள் அனைவரும் இதனை விரும்பினர்.

இவர் ஒரு குடும்ப பாங்கான பெண் போல் அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சியை விரும்பாத ஒரு பெண்ணாக இருந்தார். மேலும் இதன் மூலமாகவே நிறைய ரசிகர்களையும் கவர்ந்தார்.

கவர்ச்சியை காட்டாத கனவு கன்னி போல் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடித்த ஒற்றை ரூபாய் நாணயம் என்ற பாடல் தமிழ் சினிமாவில் ஒரு நீங்காத எல்லோர் வாயிலும் முணுமுணுக்கும் பாடல் ஒன்றாக அது அமைந்தது. அந்த பாடல் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

இதுவரை சினேகாவை புடவையில் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு முதல் முறையாக கவர்ச்சி கதாபாத்திரம் ஒன்றில் யாரும் எதிர்பாராத விதத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘புதுப்பேட்டை’ என்ற படத்தில் விபச்சாரியாக நடித்தார்.

எனினும் இந்த படத்தில் இவருடைய நடிப்பு அற்புதமாக இருந்ததால் தமிழ் திரை உலகில் முதல் இடத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அவர்களே இவருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

பிறகு காலப்போக்கில் இவருக்கு வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார். பிறகு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு தமிழ் சினிமா வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டினார்.

தற்போது இவருக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால் மீண்டும் வாய்ப்புக்காக தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார் இதில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தின் மூலமாக தனக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி வருகிறார் இதனை பார்த்த இன்ஸ்டாகிராம் விரும்பிகள் அனைவரும் இவருடைய போட்டோவிற்கு லைக்குகளும் கமெண்ட்களும் தெறிக்க விடுகின்றனர்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …