நடிகை ஜோதிகா ( Jyothika ) ஹீரோயின் என்றால் அளவான உடல்வாகு, ஆர்ப்பரிக்கும் அழகு, மனதைக் கொள்ளைக் கொள்ளும் கவர்ச்சி என சில நிபந்தனைகளுக்குள் சிக்கி இருந்த தமிழ் சினிமாவில் தனது மைனஸ்கள் அனைத்தையும் ப்ளஸ்ஸாக மாற்றி கண்களாலேயே பல கவிதைகள் சொல்லி ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் நடிகை ஜோதிகா எனும் ஜோ.
இன்றைய இளைஞர்களிடம் க்யூட்டாக துருதுருவென இருக்கும் ஹீரோயின்ஸ் யாரையாவது சொல்லுங்கள் என்றால் நிச்சயம் நஸ்ரியா, ஜெனிலியா பெயரைத் தான் சொல்லுவார்கள்.
அவர்களுக்கெல்லாம் முன்னோடி ஜோதிகா தான் என்பதை கோலிவுட்டை முழுமையாகத் தெரிந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது. கோலிவுட் திரையுலகில் பத்து ஆண்டுகளாக கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர் நடிகை ஜோதிகா.
1998ம் ஆண்டு டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘டோல் சஜா ரக்னா’ என்ற பாலிவுட் படம் மூலமாக சினிமா எனும் பெரும் வட்டத்திற்குள் அழைத்து வரப்பட்டார் ஜோதிகா. பின்னர் அடுத்த ஆண்டே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வாலி’ படத்தில் சிறிய கேரக்டரில் சோனாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் ஜோதிகா.
ரம்பா, சங்கவி, நக்மா, சிம்ரன் என கவர்ச்சி காட்டி நடித்த முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் அதை முன்வைக்காமல் வந்திறங்கினார் ஜோதிகா.தமிழில் முதல் படமே அமோக வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆனால் அந்த வெற்றி ஜோதிகாவுக்கு சொந்தமானதாக அமையவில்லை. காரணம் கதையில் அஜித்துக்கும் சிம்ரனுக்குமான ஆளுமையே அதிகமாக இருந்தது.
பின்னர் அதே ஆண்டில் சூர்யாவுடன் சேர்ந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்திருந்தார். ஜோதிகாவை பார்த்த முதல் பார்வையிலேயே சூர்யாவிற்கு காதல் மலர அந்தப் படம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த படமாக அமைந்தது.அடுத்தடுத்து வெளியான ‘முகவரி’, ‘குஷி’, ‘ரிதம்’, ‘தெனாலி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுத்தந்தன.
முகவரியில் அஜித்தின் கனவை நனவாக்கத் துடிக்கும் காதலியாக வந்தவர் அடுத்த படத்திலே விஜய்க்கு ஜோடியாகி ‘குஷி’யில் ஜெனியாக வந்து அவரின் முதல் கேரக்டரான சோனாவை மறக்கச் செய்திருந்தார்.
அதுவரை, இவரை பலரும் நடிகை சோனா, நடிகை சோனா என்று தான் அழைத்தனர். அப்படி சோனா-வாக இருக்கும் போது நீச்சல் உடையில் சில படங்களில் நடித்து அதகளப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் இங்கே.