கடவுள் கண்ணனுக்கு பிடித்த பழங்களில் ஒன்றான நாவல் பழத்தைக் கொண்டு தான் அவரது பிறந்தநாளுக்கு நெய்வேத்தியம் செய்வார்கள். அப்படிப்பட்ட கரிய நிறத்தில் இருக்கும் இந்த நாவல் பழத்தில் அளப்பரிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பறந்து ஓட வைக்கும் மிகச்சிறந்த பழமாக உள்ளது.
நாவல் பழம் செய்யும் நன்மைகள்
குறிப்பிட்ட சீசனில் மட்டும் கிடைக்கக்கூடிய எந்த நாவல் பழத்தை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் கல்லீரலில் பிரச்சனைகள் எது இருந்தாலும் அவற்றை சரி செய்யக்கூடிய ஆற்றல் இந்த நாவல் பழத்திற்கு உள்ளது.
நாவல் பழம் ஆனது சிறுநீர்ப்பைகளில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் முழு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் படைத்தது. எனவே நீங்கள் இந்த பழம் கிடைத்தால் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஈறு மற்றும் பற்களில் பிரச்சனை இருந்தால் கட்டாயம் நாவல் பழத்தை உட்கொள்வதின் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியமான பல்வரிசையை பேண வேண்டும் என்று நினைப்பவர்கள் நாவல் பழத்தை உட்கொள்ளலாம்.
இந்த பழம் மட்டும் நன்மையை தருவதில்லை. பழத்தில் இருக்கும் கொட்டையை பொடி செய்து சாப்பிடுவதன் மூலமும் எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகள் மனிதர்களுக்கு கிடைக்கிறது.
அந்த வகையில் இந்த கொட்டையை நீங்கள் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் பற்களில் இருக்கும் கரை நீங்கி பளிச்சென்று காட்சி தரும்.
அதுமட்டுமல்லாமல் அந்த கொட்டை பொடியை உங்கள் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் வெண் புள்ளிகளின் மேல் தடவி வர வெண்புள்ளிகள் மறைந்து சரும வியாதிகள் உங்களை விட்டு விலகி ஓடும்.
மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கக்கூடிய ஆற்றல் இருப்பதால் எந்த நாவல் பழத்தை நீங்கள் கட்டாயம் சாப்பிடலாம். மேலும் இந்த நாவல் பல கொட்டையை பொடி செய்து அதை தயிரோடு சேர்த்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் உங்கள் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் வெளியேறிவிடும்.
வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்ட நாவல் பழத்தை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.