வரிசை கட்டி நிற்கும் படங்கள்..! – திணறும் ஜெயம் ரவி..! – வேற லெவல்..!

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, ரொம்ப ‘பிஸி’ ஆன நடிகராக மாறி விட்டார் ஜெயம் ரவி. அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், ஓயாமல் படப்பிடிப்பு தளத்தில் நடித்துவரும் ரவிக்கு, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், இன்னும் இமேஜை தூக்கி அடிக்கும் என, சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய, ‘ஜெயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் ரவி. பிறகு ‘ஜெயம்’ ரவி ஆனார். அடுத்த படமான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ மூலம் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதில்,  அடங்கமறு, நிமிர்து நில், வனமகன், தனி ஒருவன், போகன், உனக்கும் எனக்கும், மிருதன், பூலோகம், கோமாளி உள்ளிட்ட பல படங்களில், அவர் நடிப்பில் தனிமுத்திரை பதித்தார்.

எனினும் சில படங்கள் வெற்றி பெற்றன.  பல படங்கள் வெற்றி பெறவில்லை. நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க நடிகராக இருந்தும், பெயர் சொல்லும்படியான படங்கள் ரவிக்கு அமையவில்லை. ஆனால், வித்யாசமான கதைகளில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1ல், அருள்மொழி வர்மன் என்ற கேரக்டரில், ஜெயம் ரவி நடித்திருந்தார். ராஜராஜசோழன் கதாபாத்திரமாக அவர் நடித்திருந்த கேரக்டர், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இதில் ஜெயம் ரவி மட்டுமின்றி கார்த்தி, விக்ரம், பிரபு, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது என்றாலும், ரவியின் நடிப்பு மிக பிரதானமாக, படத்தில் அமைந்திருந்தது.

அடுத்த மாத இறுதியில், ஏப்ரல் மாதம் 28ம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், அதுவரை பெரிய அளவில் பேசப்பட்டாத ஜெயம் ரவியின் நடிப்புக்கு, பொன்னியின் செல்வன் மூலம், நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன் பிரதிபலிப்பாக தற்போது அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி ‘கமிட்’ ஆகி, ‘பிஸி’ ஆக நடித்து வருகிறார்.

கடந்த வாரத்தில், அவர் இரட்டை வேடங்களில் நடித்த ‘அகிலன்’ படம், நல்ல வரவேற்புடன், தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, நயன்தாரா ஜோடியாக ‘இறைவன்’ என்ற படத்தில், ஜெயம் ரவி நடித்துக்கொண்டு இருக்கிறார். அதையடுத்து, ‘சைரன்’ என்ற படத்தில், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக, இவர் நடிக்க உள்ளார். ‘ஜனகன மண’ என்ற படத்திலும், நடிக்க ரவி ஒத்துக்கொண்டுள்ளார்.

அடுத்து ஜேஆர் 32 என்ற பெயர் வைக்கப்படாத படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படி பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிவதால், ஜெயம் ரவி திக்குமுக்காடி வருகிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …