அன்று பாக்யராஜ் செய்த ‘உதவி’க்கு, இன்று மகன் சாந்தனுவுக்கு கிடைத்த ‘பலன்’

தமிழ் சினிமாவில், மிகச்சிறந்த இயக்குனராக வெற்றிக்கொடி நாட்டியவர் பாக்யராஜ். கடந்த 1980-90களில் தமிழ் பட இயக்குநராக அவர் பெற்ற வெற்றிகள் ஏராளம். இதுவரை இந்திய அளவில் சிறந்த கதை ஆசிரியர் என்றால் அது பாக்யராஜ் மட்டுமே. அந்த அளவுக்கு மிகச்சிறந்த திறமைசாலி.

ஆனால், அவரது மகன் சாந்தனு, பாக்யராஜை போல 10 சதவீத பெயரை, புகழைக்கூட தமிழ் சினிமாவில் அடைய முடியவில்லை. சில படங்களில் நடித்தும், அவரது படங்கள் எதுவுமே பெரிய அளவில் பேசப்பபடவில்லை. 

இந்நிலையில், ஸ்டார் அந்தஸ்தில், ‘டாப்’ ஹீரோக்களுக்கு நடப்பதை போல,  சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் படத்தின் பிரமாண்ட ஆடியோ லாஞ்ச், சமீபத்தில்  துபாயில் நடந்திருக்கிறது.

 இதுவரை, பெரிய அளவில்  வெற்றி படங்கள் தராமல் தடுமாறி வரும் சாந்தனுவுக்கு,  ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் ஆக இராவண கோட்டம் படம் படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் இராவண  கோட்டம் படம் உருவாகி வருகிறது  இந்த படத்தை துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை, துபாயில்  அதிக செலவில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உளளது.  

பாக்யராஜின் வாரிசு நடிகர் சாந்தனு என்பதை தவிர, சாந்தனுவுக்கு வேறு அடையாளங்கள் எதுவுமில்லை. வளர்ந்து வரும் நடிகரான இவரது படத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஏன் இவ்வளவு செலவு செய்கிறார் என பலருக்கும் கேள்வி எழுந்தது. அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. 

பல ஆண்டுகளுக்கு முன்,  கண்ணன் ரவி ஒரு பெண்ணை காதலித்தார் அந்தப் பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இந்த விவகாரம்,  போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விட்டது. கடைசியில் போலீசாரும், காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், செய்வது அறியாமல் திகை்க கண்ணன் ரவி, தனக்கு தெரிந்த பாக்யராஜ் ரசிகர் மன்றத் தலைவரிடம் இதுகுறித்து கண்ணன் ரவி கூறியுள்ளார். அவர் மூலம, தகவல் அறிந்த பாக்யராஜ், அப்போதைய சூழலில்,  கண்ணன் ரவி யார் என்பது தெரியாத போதிலும்,  அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு  போன் செய்து,  இந்த திருமணத்தை நடத்தி வைக்குமாறு பாக்யராஜ் வலியுறுத்தி உள்ளார். 

அந்த காலகட்டத்தில் மிக பிரபல நடிகராக இருந்த பாக்யராஜ் கூறியதால், போலீசாரும் மறு பேச்சின்றி,  இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.  

திருமணத்துக்கு பின்பு, கையில் இருந்த  ஆயிரம் ரூபாயுடன் கண்ணன் ரவி தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார்.அங்கு கடினமாக  உழைத்து படிப்படியாக முன்னேறி இப்போது தொழில் அதிபராக, பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்துள்ளார்.  

அன்று யாரென்று தெரியாமல் தனது திருமணம் நடக்க உதவிய  பாக்யராஜூக்கு,  அவரது மகன் சாந்தனு நடிக்கும் படத்தை பல கோடி ரூபாய் செலவில் தயாரித்து, தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார் கண்ணன் ரவி. அதேவேளையில், சாந்தனுக்கு இந்த படம் நிச்சயம் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …