சமீபத்தில், சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் திடீரென நயன்தாரா ( Nayanthara ) மற்றும் விக்னேஷ் சிவன் பூஜை நடத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்பதும் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைத்துறையில் பொருத்தமான ஜோடியாக நயன்தாரா – ஜெயம் ரவி இருவருக்கும் ஒரு பெயர் உண்டு. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
ஜெயம் ரவி – நயன்தாரா
இந்தப் படத்தை அஹமத் இயக்குகிறார். இவர் மனிதன், என்றென்றும் புன்னகை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே, தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார் நயன்தாரா. அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில், மீண்டும் இதே ஜோடி இணைந்துள்ளது கோடம்பாக்க ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.