பாத்ரூம் கிளீன் செய்ய வேண்டும் என்பது மிகப்பெரிய விஷயமாக அனைவருக்கும் இருக்கும். வார விடுமுறை நாட்களில் குடும்பத்தில் இருக்கும் நபர்களில் எவரேனும் ஒருவர் கட்டாயம் இந்த கிளீனிங்கில் ஈடுபடுவார்கள். இதற்காக நீங்கள் செயற்கையான ரசாயனக் கலவைகளை பயன்படுத்தி உங்கள் பாத்ரூமை பளிச்சென்று மின்ன வைப்பீர்கள்.
இயற்கை முறையில் நான் தூரப் போடும் பொருளிலிருந்து உங்கள் பாத்ரூமில் எளிதாக சுத்தப்படுத்தக்கூடிய முறையை இப்போது இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இது கோடைகாலம் என்பதால் நீங்கள் அதிகளவு ஆரஞ்சு பழங்களை வாங்கி சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் போது அதில் இருக்கும் தோலை நீங்கள் அப்படியே தூர எரியாமல் வைத்திருங்கள்.
இந்த தூர எரியும் தோலை வைத்து தான் உங்கள் பாத்ரூமில் புத்தம் புது பாத்ரூமாக மாற்றப் போகிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நான் கூறுகிறேன்.
நீங்கள் வெளியே போட நினைத்திருக்கும் ஆரஞ்சு பழ தோல்களை அப்படியே ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் அளவு தண்ணீரை விட்டு கேஸ் அடுப்பில் வைத்து நன்கு சூடாக்குங்கள்.
இப்போது இந்த நீரானது சற்று நிறம் மாறி இருப்பதை பார்ப்பீர்கள். அப்படி நிறம் மாறி இருக்கக் கூடிய நேரத்தில் நீங்கள் அடுப்பை அணைத்து விடுங்கள்.
பிறகு இந்த நிறம் மாறி இருக்கும் நீரை ஒரு ஸ்ப்ரேயருக்குள் ஊற்றிக் கொள்ளவும். இதனோடு தேவையானில் பாத்திரம் தேய்க்க கூடிய ஜெல்லை சிறிதளவு போட்டுக் கொள்ளலாம்.
இப்போது இந்த ஸ்ப்ரேயரில் இருக்கும் நீரைக் கொண்டு உங்கள் பாத்ரூம் முழுவதும் ஸ்பிரே செய்து விடுங்கள். சில மணி நேரங்கள் கழித்து நீங்கள் நன்கு தேய்த்து விடுங்கள். இப்போது உங்கள் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும் அது மட்டுமல்லாமல் ஆரஞ்சு பல வாசதோடு இருக்கும்.
இதுபோல் நீங்களும் உங்கள் பாத்ரூமை ஆரஞ்சு பழத் தோலை கொண்டு சுத்தம் செய்து பாருங்கள். உங்களுக்கு நாங்கள் கூறியது உண்மை என்பது புலனாகும். வீணாய் போகும் இந்த ஆரஞ்சு பழ தோலை கொண்டு எத்தனை அற்புதங்கள் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் நீங்கள் செய்து பார்ப்பது மூலம் உணர முடியும்.