பிரபல போஜ்புரி பட நடிகையான இளம் நடிகை ஆகான்ஷா துபே ( akanksha dubey ) வாரணாசியில் உள்ள ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவர், தன்னுடைய 17 வயதிலேயே மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே நேற்று அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், அவருடைய அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை கிளப்பிவிட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலை அங்கிருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆகான்க்சா துபே, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார். நேற்றிரவு அறை எடுத்து தங்கிய அவர் பாடல் ஒன்றுக்கு செல்ஃபி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று சடலமாக அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நடிகரும் மற்றும் பாடகருமான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்ஷா.
அதுபற்றி சமீபத்தில் தான் காதலர் தினத்தில் சமூக வலைத்தளத்தின் வாயிலாக காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் கடைசியாக வெளியிட்ட காணொளி காட்டி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
இப்படி சந்தோஷமாக நடனமாடிக்கொண்டிருந்த நடிகை திடீரென இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம்..? இது கொலையா..? அல்லது தற்கொலையா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.