நடிகை ஜோதிகாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகர் சூர்யா. இவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இப்போது, சூர்யா – ஜோதிகா குடும்பத்தினர் சென்னையில், சூர்யாவின் தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தி என, அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், தற்போது நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் சூர்யா, மும்பையில் ரூ. 70 கோடி ரூபாய் மதிப்பில் பிளாட் வாங்கியிருப்பதாகவும், ஜோதி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியானது.
நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தை போல, நடிகர் சிவக்குமாரும் தனது பிள்ளைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார் என்று தமிழ் சினிமாத்துறையினர் பெருமையாக கூறி வந்த நிலையில், சூர்யா மும்பையில் குடியேறுவதாக வந்த தகவல், பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், இது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், தற்போது அதுபற்றிய உண்மையான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மும்பையில் இருக்கும் ஜோதிகாவின் பெற்றோர், வயதானவர்களாக உள்ளனர். முதுமை காரணமாக, அவர்கள் நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களை பக்கத்தில் இருந்து, ஜோதிகா கவனித்துக்கொள்ளும் ஒரு வசதிக்காகவே, தற்காலிகமாக மும்பையில் பிளாட் வாங்கியுள்ளார் சூர்யா.
மேலும், ஜோதிகா தற்போது சில பாலிவுட் தொடர்களில் நடிப்பதால், மும்பையில் இருந்தால், படப்பிடிப்புக்கு சென்றுவர ஜோதிகாவுக்கு வசதியாக இருக்குமே, என்பதும் மற்றொரு முக்கிய காரணம். மேலும், மும்பையில் ஒரு சொத்து என்ற அடிப்படையில், இந்த பிளாட்டை வாங்கியுள்ள சூர்யா, நிரந்தரமாக இருக்க போவது எப்போதுமே சென்னையில்தான் என, தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.