‘இப்பவும் கூட இவங்க ஹீரோயினா நடிக்கலாம்’ – நதியாவை பார்த்தா, ரசிகர்களுக்கு அப்படித்தான் தோணுதாம்

தமிழ் சினிமாவில் 1980களில் கொடி கட்டி பறந்தவர் நதியா. கவுரமான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். கிளாமர் பக்கமே போகாத நடிகைகளில் இவரும் ஒருவர். கடந்த 1985ல் பூவே பூச்சூடவா படத்தில், பாசில் இயக்கத்தில் நதியா அறிமுகமானார். பாட்டியாக பத்மினி – பேத்தியாக நதியா நடித்த இந்த படத்தை, இப்போதும் வெகுவாக ரசித்து பார்க்கலாம்.

அதைத்தொடர்ந்து உயிரே உனக்காக, நிலவே மலரே, ராஜாதி ராஜா, மந்திரபுன்னகை, சின்னதமபி பெரியதம்பி, உனக்காகவே வாழ்கிறேன், ராஜகுமாரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே, திருமணமாகி, வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் நதியா. இப்போது, அவருக்கு வளர்ந்த நிலையில், மகள்கள் உள்ளனர்.

மீண்டும், 2004ல் ஜெயம் ரவியுடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில், அம்மா கேரக்டரில் நடித்து, மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். பட்டாளம், சண்டை, தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து முக்கியத்துவம் உள்ள அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களில் பிறமொழி படங்களிலும் நடிக்கிறார்.

சமீபத்தில், அதிகாலை நேரத்தில் சூரிய ஒளி படர்ந்திருக்கும் ரம்யமான இயற்கை சூழலில், எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நதியா.

இன்னும் இளமையும், அழகும் மாறாமல் ஜொலிக்கும் நதியாவின் இந்த புகைப்படங்களை பார்த்து, லைக் செய்யும் பலரும், இப்பவும் கூட இவங்க, ஹீரோயினாக நடிக்கலாம், என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …